Wednesday 17 July 2013

உன் சிரிப்பு இசையாக வருகிறது

நீ சிரித்தால் நான் மகிழ்கிறேன்
நான் சிரித்தால் நீ குதிக்கிறாய்

நீ அழுதால் நான் துடிக்கிறேன்
நான் அழுதால் நீ வியக்கிறாய்

உன் சிரிப்பு இசையாக வருகிறது
நான் சிரிப்பது உனக்கு வேடிக்கையாக இருக்கிறது

நான் சிரித்தால் நீ மறப்பாய்
நீ சிரித்தால் மனதோடு உறைகிறாய்

உன் உள்ளத்தில் ஒளிவு மறைவில்லை
உன்னை சிரிக்க வைத்து மகிழ நான் நடிக்கிறேன்

நீ ஓடி உலகம் பாராமல்  உயர்ந்து நிற்கிறாய்
நான் ஓடி உலகம் பார்த்து தாழ்ந்து நிற்கிறேன்

உன் பருவம் உன்னை உயர்வாக்கியது
என் பருவம் என்னை தாழ்வாக்கியது

நீ என் பருவம் வர உன் நிலையும் என் நிலையாகும்
நீ என் பருவம் வந்த பின் உனக்கென உன் பருவத்தில் ஒரு குழந்தை உனக்கும் வரும்

என்நிலையில் நான் உன்னோடு மகிழ்ந்த நிலையை நீயும் பெற்று மகிழ்வாய்.

4 comments:

  1. மனம் கவரும் வரிகளை ரசித்தேன் பலமுறை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. That's nice, thought-provoking write. No one could stay put in the stage he/she is in.The wheels of time change everything.

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன்
    மிக்க நன்றி தங்கள் மனம் கவரும் கருத்துரைக்கு

    ReplyDelete
  4. @ Arumugam Easwar
    Thank you very much for your nice, thought-provoking and kind comment

    ReplyDelete