Sunday 30 June 2013

எங்கே அவள்? என்று நான் ஏன் கேட்க வேண்டும் !

எங்கே அவள் என்று  நான் ஏன் கேட்க வேண்டும் !
அவள் பள்ளிவாசலுக்கு தொழ போயிருக்க மாட்டாள்
அவள் வீட்டில்தானே தொழுவாள்
அவள் விரும்பினாலும் அவளை பள்ளிவாசலில் தொழ யார் விடுவார் !

பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடுதான் அவர்களுக்குச் சிறந்தது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

ஆண்கள் தொழத் தானேபள்ளிவாசலை  பெரிதாக கட்டினோம்
ஆண்கள் தொழுவார்கள் பெரிய  பள்ளிவாசலில் ஆனால் தொழுபவர்கள்  குறைவு
பள்ளிவாசலில் மற்ற இடங்களில் பெண்கள் திரை போட்டு தொழவும் அனுமதி தரமாட்டார்கள்
பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை நிறைந்து நின்று தொழ பெரிதாக கட்டினார்கள்

அவள் பள்ளிவாசலுக்கும் போக மாட்டாள்
அவள் கடைதெருவுக்கும் போக மாட்டாள்

அவள் போகுமிடம் அவள் அம்மா வீடு அல்லது மகள் வீடு
அவள் அவளது சகோதரி வீட்டுக்கும் போயிருக்கலாம்
அவள் அவளது சகோதரியை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கவும் போயிருக்கலாம்

ஊருக்கு போய் வந்து வீடு பூட்டி இருக்க இத்தனை குழப்பங்களும் வருகிறது.
பாவம் ! போய் விட்டு வரட்டும் நாம்தான் அவளை வீட்டு வேலையில் முடக்கி விட்டோமே !

5 comments:

  1. அவர்களின் சந்தோசமே நமக்கு மனநிறைவு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Yea, women needs some respite from their oppressing house chores.

    ReplyDelete
  3. @ திண்டுக்கல் தனபாலன்
    நன்றி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. @ Arumugam Easwar
    நன்றி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. women do need time for herself to free her mind from regular household works.. well, she may also have gone to the ladies' majlis to pray and recite.. very nice read.. :)

    ReplyDelete