Friday 18 October 2013

நீ தான் என் நிழல்


என்னை நீ  தொடர்கிறாய்
என்னைப் போல் நீ இருகிறாய்
என்னைப் போல் உணர்க்கு உணரவில்லை

நான் நடந்தால் நீ நடக்கிறாய்
நான் நின்றால் நீ நிற்கிறாய்
நான் சிரித்தால் நீ சிரிக்கிறாய்

நான்  கத்தினால் ஒலி வருகின்றது
நான் கத்தினால் நீ நான் கத்துவதுபோல் காட்டுகிறாய்
நான் உறங்கப் போனால் நீ ஓய்வு கொள்கிறாய்
நான் இருளிலும் வெளிச்சத்திலும் உலா வருகின்றேன்
நான் இருளில் வர நீ மறைந்து விடுகிறாய்

நீ என்னின் சரியான பிரதியாய் இருக்கிறாய்
நீ என்னைத் தொடரும் நண்பன்
நீ என்னைப் போல் உணர்வு பெற்றிராததால்
நான் உன்னை அறிந்து கொள்ள முடியவில்லை
நான் இல்லையேல் நீ இல்லை
நீ என்னுள் அடக்கம்

1 comment: