Monday 21 October 2013

கனவுகள் கவித்துவம் பெறவில்லை


கனவுகளை கற்பனையோடு கலந்து
கலையாய் கவிதையை வடித்தேன்

குடித்த பாணத்தில் இனிப்பில்லை என்பதுபோல்
படித்த கவிதையில் பிடிப்பில்லை என்றனர்

வாயில் ஊறிய உமிழ்நீர் உண்ட உணவை செரிக்கச் செய்யும்
கவிதை வடிவில் வந்த வரிகள் அறிவு வளரச் செய்யும்

முதல் எழுத்து ஒன்றி வந்து மோனையாகி
இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வந்து எதுகையாகி விடும்

கவிதையில் எடுத்து வைத்த எழுத்துகள் அசையாக வில்லை
அசைகளால் எடுத்து வைக்காமல் அது சீர்களாக வில்லை

கனவுகள் கலைந்து வந்தமையால் நினைவில் நின்று சீராகவில்லை
வரிகள் கலைந்து வந்தமையால் நினைவில் நிற்கும் கவிதையாகி சிறப்பாகவில்லை


1 comment: