Monday 7 October 2013

நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ...

நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ...

வாழ்க்கையில் நாம் முற்றிலும் வேடிக்கையாக காலத்தை கழிக்கிறோம்.
நம்மை  கைவிட்டு போன உணர வைத்த நேரங்களும் இருக்கின்றன. ஒரு சாதாரண காட்சி அல்லது சிறிய அனுபவம் நம் நினைவை மறக்கின்றன. இது போன்ற நேரங்களில், நாம் அதில் நம் அனைத்து நம்பிக்கையும்  ஒரு ஈடுபாடும் கொண்டிருந்தால் நம் வாழ்கையையே மாற்றி அமைத்து நம்மை உயர்வாக்கி மகிழ வைத்திருக்க முடியும். அதனை நாம் சாதாரண நிகழ்வாக அல்லது காட்சியாக பொருட்படுத்தாமல் விட்டு விட்டோம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு காட்சியும் அதற்கென ஒரு சிறப்பை பெற்றிருக்கிறது என்பதனை அறிய வேண்டும்.

உத்வேகத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது, அதை உணரத்தான் முடியும் .மற்றும் செயலால் அனுபவிக்க முடியும் .

உத்வேகம் எங்கேஇருக்கிறது? சுற்றி பாருங்கள், அது எல்லா இடங்களிலும் இருக்கிறது.

வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு நம்மை இட்டுச் செல்வது உத்வேகம்தான்.

உத்வேகம் செடியாகி மலர்ந்து பழம் கிடைத்து பலனடைய நமக்கு தேவையானது
சிறிதளவு உத்வேகம் கிடைக்க  கடுமையான உழைப்பும் , மன உறுதியும்தான் தேவைப் படுகின்றது .

நாம்  நம்மை சுற்றி நேர்மறையட்ற மக்களை விட்டும் விலகி இருக்க வேண்டும்.
குறை காணும் மக்கள் நிறைகளை தருவதில்லை.
நிறை மனம் கொண்டோர் நிகழ்த்திக் காட்டுவர்.
நிறைமனம் கொண்ட மற்றும் எழுச்சியூட்டும் மக்களோடு இருப்பது உத்வேகம் உருவாக வாழ்க்கையை  உயர்வாக்கி வாழ சிறந்த வழியாக அமையும்.

எழுச்சியூட்டும் எண்ணங்கள் ஆசீர்வதிக்கும் மக்கள் நம்மோடு இருப்பது ஆக்கத்திற்கு வழி வகுக்கும் .

2 comments:

  1. // எல்லா இடங்களிலும் இருக்கிறது... //

    உறசாகம் தரும் வரிகள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. Nice and Interesting. A G+ for ur Post and Have a Nice Day. . . :)

    ReplyDelete