Saturday 3 May 2014

வந்தது அறிவிப்பின்றி வந்தது

வந்தது அறிவிப்பின்றி வந்தது
வந்ததும் உயர்வானதாய் வந்தது

சென்றதும் சொல்லிக் கொள்ளாமல் போனது
சொல்லிக் கொள்ளாமல் சென்றதும் சிறப்பற்றுப் போனது

வந்தது வரவாக
சென்றது செலவாக

வந்ததும் மகிழ்வைத் தந்தது
சென்றதும் சிறப்பைத் தந்தது

வந்ததால் குதிக்கவில்லை
சென்றதால் துவளவில்லை

வந்ததும் சென்றதும்
மனதில் உறுதியைத் தந்தது

கொடுப்பதும் எடுப்பதும்
இறைவன் நாட்டமே

கொடுத்தவனும் அவனாய் இருக்க
எடுத்தவனும் அவனாய் இருக்க

கொடுக்கவும் எடுக்கவும் அவன் வசமிருக்க
சுமைதாங்கியாகிய நான் அசைவற்றிருந்தேன்


No comments:

Post a Comment