Saturday 3 May 2014

செய்ய வேண்டியதை செய்ய வில்லை

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை".

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

நூல்: வாக்குண்டாம்

பாடியவர்: ஔவையார்
-----------------------------------------------------------------------

பொல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யா மழை ஆகி
வறண்ட பூமியாக்கிய நிலை
தண்ணீர் வாய்க்கால் வழியாக வர முடியாமல் அடைக்கப் பட்டு விட்டன
வாய்க்கால்கள் மூடப்பட்டு தொழிற்சாலைகள் ,கட்டடங்கள் வீடு கட்டிய நிலை
மரங்கள் வெட்டப்பட்டு மழை வராத நிலை
செய்ய வேண்டியதை செய்ய வில்லை
செய்யக் கூடாதவைகளை செய்து மழை பெய்ய வில்லை என வருந்துகின்றோம்
கடமையை செய்யாமல் பலனை எதிர் பார்க்கின்றோம்
இறைவனை வேண்டு ஆனால் அதற்கு முன் கடமையை செய்

ஒட்டகத்தை கட்டு இறைவனிடம் ஒட்டகத்தின் பாதுகாப்பை நாடு -நபி மொழி

No comments:

Post a Comment