Sunday 18 May 2014

வேண்டாத பகை வேண்டாம்

இருந்தவருக்கும் வந்தவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்
போட்டவருக்கும் போடாதவருக்கும் வேண்டாத பகை வேண்டாம்

இருந்தவர் செய்த தவறோ
போட்டவர் செய்த தவறோ

வரக் கூடாதவர் வந்து விட்டாய்
வந்தவருக்கு வழி விடுதல் பண்பாடு

வந்த பின் உன்னிலை அறிவாய்
வந்த பின் என்னிலையும் அறிந்துக் கொள்

சேராத இடத்தில் சேர்ந்து செய்யத் தகாததை செய்தாய்
சேர்பிக்கப் பட்ட இடத்தில செய்வதை உயர்வாகச் செய்

இமயம் சென்றாய்
தேநீர் விற்றாய்
பதவிகள் பெற்றாய்
பயனும் அடைந்தாய்

தாயின் ஆசியுடன்
பெரிய பதிவிக்கு வந்துள்ளாய்
தாய் அருமை அறிந்த உனக்கு
தாரத்தின் அருமையும் தெரிய வரும்
மக்களின் வாட்டமும் அறிய வரும்

வாய்ப்பை இறை நேசம் பெற
மனித நேயத்தை முன்னிறுத்தி
மக்களுக்கு சேவை செய்து விடு
இறைவனை நினைத்தால்
இனியவையே செய்ய முயல்வாய்
வாழ்த்துகின்றேன்
வழி விடுகின்றேன்
நல்லதை ஆற்றி விட

No comments:

Post a Comment