Saturday 24 May 2014

நம்மை நாமே ஆற்றிக் கொள்ளும் பெருந்தன்மை

துணிவு அச்சம் இல்லாமை அல்ல
துணிவு மற்றதில் உள்ள விழிப்புணர்வு

நான் தோல்வி அடைந்தால்
சிலர் வருந்துகின்றனர் சிலர் மகிழ்கின்றனர்
நான் வெற்றி அடைந்தாலும்
சிலர் வருந்துகின்றனர் சிலர் மகிழ்கின்றனர்
நான் பெரும் வெற்றியும் தோல்வியும் என்னைச் சார்ந்தது
அதனால் ஏற்படும் வருத்தமும் மகிழ்வும்
என்னைச் சார்ந்தது என்பதை யாரும் அறிந்துக் கொள்வதில்லை
வருத்தத்திலும் மகிழ்விலும் பங்கு கொள்வதாக சிலர் நினைத்து
அதனால் எனக்கு நன்மையும் மற்றும் பாதகமும் வந்து சேர்கின்றது

நான் அதை செய்ய நினைத்தேன்
நான் அதனை செய்வதற்குரிய அத்தனை ஆற்றலும் பெற்றிருக்கின்றேன்
ஆனால் அதனை ஏன் செய்யாமல் விடுத்தேன் என்பதை
நானே அறிய முடியவில்லை!
நம்மை நாமே ஆற்றிக் கொள்ளும் பெருந்தன்மை.

நல்லவை கெட்டவை
உயர்வு தாழ்வு
வெற்றி தோல்வி
ஒன்று இருந்தால்தான் மற்றொன்றும்
இரண்டுமில்லாமல் ஏதுமிருக்காது
ஆண் பெண்
ஆணும் பெண்ணும் இணைய
அடுத்தது உருவாகின்றது

கெட்டவர் ஒருவர் இருக்க
நல்லவர் அடையாளம் காட்டப் படுகிறார்

நல்லவராக விரும்புவதும்
கெட்டவரும் நல்லவராக விரும்புவதும்
நல்லவரின் உயர்வு

தான் மட்டும் நல்லவராக விரும்புபவர்
கெட்டவராகி விடுகிறார்

No comments:

Post a Comment