Friday 30 May 2014

தேடி அலைவதோ முழுமையை நாடி

என் முகத்தைப் பார்க்கிறாய்
என் உருவத்தைப் பார்க்கிறாய்
என் ஆடையைப் பார்க்கிறாய்
என் உள்ளத்தை அறிந்துக் கொள்ள முடியாமல்
ஒவ்வொருவராக தேடி அலைகிறாய்
ஒவ்வொரிட்டதிலும் ஒரு குறையை காண்கிறாய்

நீயே முழுமையாகப் படைக்கப் பட்டவன் அல்ல
நீ தேடி அலைவதோ முழுமையை நாடி
நீ முதுமையை அடைந்து விடுவாய்
நீ முழுமை பெறுவதற்குள்

தானே வருகிறது
தானே மறைகிறது

நினைத்தாலும் வருவதில்லை
நினைத்தது வந்தாலும் நிலைத்து நிற்பதில்லை

No comments:

Post a Comment