Friday 9 May 2014

வெற்றியும் தோல்வியும்

                                                  வெற்றியும் தோல்வியும்

கட்சி முறையில் சொன்னால்-
தோற்ற கட்சி திரும்பவும் போட்டி போட்டு அடுத்த தேர்தலில் வெற்றி அடைகிறது .
ஒரு முயற்சியில் வெற்றி தோல்வி நடைபெறுவது இயல்பு .
வாழ்வே ஒரு போர்களம் அதனை நாம் முயற்சி செய்து பொற்காலமாக ஆக்க முயல்வது நம்பிக்கை .
நம்பிக்கைதான் அடித்தளம் .
தேர்தலில் மற்றவர்கள் நம்மை தேர்ந்தெடுக்கின்றார்கள்.
தேர்வில் நம்மை உருவாக்கிக் கொள்கின்றோம் .
தேர்தலில் வெற்றி பெறவும் நாமும் நம்மை சார்ந்த கட்சியும் வெற்றி பெற உருவாக்கிக் கொள்ள வேண்டும் .
தோல்வியைக் கண்டு துவளவோ வெற்றியைக் கண்டு துள்ளுவதோ மனிதனின் மாண்பை உயர்த்தும் வழியல்ல .
கடமையைச் செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு
--------------------------------------------------
ஊர் சுற்றி படிக்கும் மாணவர்களுக்கும் அதனால் அடையும் அறிவுக்கும் நமது வாழ்த்துகள்

படிப்பும், அனுபவங்களும் அதிகம் கிடைக்குமிடங்கள் அரசு பள்ளிகள்தான் .
புத்தகப் புழுவாக இருந்து ,மனனம் செய்து அதிக மதிப்பெண்கள் வாங்குவதைவிட அனுபவப் பாடங்களோடு பெறும் கல்வி உயர்வானது
அனுபவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைச் சொல்லித் தருகிறது.
-------------------------------------------------------------
அக் காலத்தில் கேரளாவில் தேர்வில் படிக்கும் மாணவர்களை குறைவாகவே தோல்வி அடையச் செய்தார்கள்.அதனாலேயே அங்கு படித்தவர்கள் சதவீதம் உயர்ந்தது .படித்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தார்கள் அதனால் இன்னும் அங்கு சதவீதம் அதிகமானது .
இங்கு நாங்கள் S.S.L.C. தேர்வில் ஒரு பேப்பர் தேறாமல் போனாலும் அனைத்தும் சேர்த்துதான் தேர்வு எழுத வேண்டும் . பிறகு எழுதி தேர்வு பெற்றாலும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்
இப்பொழுது நிலைமை மாறிவிட்டது .
உடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று இந்த வருடமே படிப்பை தொடரலாம் .மற்றும் தோல்வி அடைந்த பேப்பரை (subject) மட்டும் எழுதி வெற்றி பெற முடியும் .
இக்கால மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் .
வாழ்த்துகள்

தேர்வில் தொற்றவர்களுக்கும் ஆறுதல்கள் .தோல்வியே வெற்றிக்கு அடித்தளம் .
Try and try again boys, you will win at last.


No comments:

Post a Comment