Tuesday 28 May 2013

நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம் !

நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம்
`அப்பா ரொம்ப  தொலைவில் வெளிநாட்டில் இருக்காரே நம்ம மேலே அன்பா இருந்து நம்மை நினைத்து பார்ப்பாரா அம்மா`
நிட்சயமாக நம்ம நினைவில்தான் இருப்பார்.
அப்பா இந்த பெருநாளுக்கு ஊருக்கு வரமாட்டாரா அம்மா !
நீ படிக்க பணம் வேணுமே! அதுக்குத்தான் உங்க அப்பா அங்கே தங்கி இருக்காங்க . இன்சாஅல்லாஹ் அடுத்த பெருநாளுக்கு நம்முடன் இருப்பார் . நீ நல்லா பெருநாள் கொண்டாடவேண்டும்  என்றுதான் நினைக்கிறார், அதனால்தான் அவர்  உனக்கு பணம்,சட்டை பாவாடை  எல்லாம் அனுப்பி இருக்கின்றார் .

பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை  பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல்  இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.
.எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !
எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில்  மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம்  தேட வேண்டிய நிலமை  என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

4 comments:

  1. என்ன தான் சொன்னாலும் அந்த பிரிவின் வலி புரிகிறது...

    ReplyDelete
  2. Yes, I agree. There's no free lunch in life.

    ReplyDelete
  3. Thanks to Arumugam Easwar for your visit and comment.

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன்அவர்களது கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete