Tuesday 19 March 2013

உங்கள் வாழ்க்கைப் பயணம் உயர்வடைய...,

செயல்பாடு மன வலிமையோடு தொடங்கட்டும் 

எண்ணங்கள் உயர்வாக தொடரட்டும்

 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். ஸஹீஹுல் புகாரி 1

பேசுவது மென்மையாக இருக்கட்டும்
(தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.
என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.ஸஹீஹுல் புகாரி 5975.

நடை தாழ்மையாக நடுநிலையாக  இருக்கட்டும்
கேட்பதில் பொறுமையைக் கைப்பிடித்தல்  வேண்டும்
நம்பிக்கை சரியாக இருக்கச் செய்தல் சிறப்பு
உடை மிடுக்காக உடுத்துவது உயர்வு
செய்யும் வேலை உண்மையாக இருக்கட்டும்
நினைப்பது தர்க்கரீதியாக இருக்கட்டும்
திட்டம் வகுப்பதில் சிந்தனை செயல்படட்டும்
பொருள் ஈட்டுவதில் நேர்மை நிலவட்டும்
சேமிப்பு தொடர்ந்து செயல்படட்டும்
செலவு செய்வதில் அறிவு செயல்படட்டும்
உண்பதில் முறையாக இருக்கட்டும்
தூக்கம் தேவையானதாக   இருக்கட்டும்
சாதிப்பது சரியாக இருக்கட்டும்

No comments:

Post a Comment