Friday 29 March 2013

தவறாக இருந்தால் கொட்டு போடுங்கள்

 தாங்கள் கொடுக்கும் சிறப்பான செய்திகள்,அறிவார்ந்தவைகள்  பரவலாக்கப்பட வேண்டும் .அதனை மற்றவர்களும் எடுத்துப்  போட வேண்டும் .கிடைத்த இடம் தெரிவிக்கப் பட வேண்டும்.ஆனால் உரியவருக்கு அதன் பெருமை, நன்மை சேர வேண்டும் அதன் வழியே நமக்கும் நன்மை கிடைக்க  வேண்டும். நல்ல பொருட்களைத்தான் மக்கள் நாடுவார்கள் . நீங்கள் நல்லவரா! அல்லது கெட்டவரா! எடுத்தவர்  நல்லவரா? அல்லது கெட்டவரா? என்பதை  இறைவன் எடை போடட்டும்.  காப்புரிமை சொல்லி மக்கள் பயன்படுவதை தடுக்க வேண்டாம்.இருந்த வரை நன்மையான காரியத்தை செய்தோம் என்ற மன நிம்மதி கிடைக்கும் .இறைவன் நமக்கு கொடுத்த அறிவு நம்மோடு அழிந்துவிடக் கூடாது . தொடருங்கள் உங்கள் சேவையை அதன் வழியே நன்மையையும் மகிழ்வையும் அடைந்து விடுங்கள்

 
எங்கள் பக்கமும் வந்து பார்வையிட்டு தவறாக இருந்தால் கொட்டு போடுங்கள் நன்றாக இருந்தால் சொட்டு போட்டு உற்சாகம் கொடுங்கள். தாங்கள் எங்கள்  பக்கமும் வந்தால் எங்களுக்கு பெருமையோடு மகிழ்வும் கிடைக்கும் அத்துடன் உங்கள் வளமான நடையை கண்டு பிரமிப்பவர்களும் அதிகமாகலாம்

No comments:

Post a Comment