Monday 25 March 2013

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்

ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்?
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்?
பேதமை எம்மனதில்  ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று

சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

ஒற்றுமையில் சிக்குண்டு நம்மில் நாமே மோதுண்டோம்.
ஒற்றுமையின்  உயர்வை  வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
 வேதம் அறிந்து கல்விகற்று  களையடுக்க வேண்டும்

அயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ!
 செயலானின்    ஆற்றல் ஓய்ந்த்திடுமோ !
அறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்
'சீன தேசம் சென்ராயினும் சீர் கல்வியை நாடு' என நபி மொழி இருக்க
நக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்
ஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்
இறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி
இறைவனைத்  தொழுது  நிறைவு கொள்வோம்  

No comments:

Post a Comment