Thursday 28 March 2013

கடமையச் செய்து கேட்பது உயர்வு

அளவற்ற அருளாலனாய்
நிகரற்ற  அன்புடையோனாய்
நிலையாய் நிலைத்துருப்பவனாய்
நிறைந்த மனதுடையவனாய்
நினை நினைத்தோர்  மனதில் நிறைந்தவனாய்
நினை யல்லால் யாரை வைத்து தொடங்குவோம்
நினை விடுத்து யாரிடம் யாம் யாசகம் கேட்போம்

உமை முழுமையாக அறிந்து விட்டால் தொல்லை ஏது! துயரமேது!
உமை நாடியோருக்கு நன்மையே செய்வாய்
உம்மிடம் வேண்டியவர்க்கு  செய்தவையும்  நன்மையாக இருக்கும்
உம்மை நாடி  வேண்டியவர்க்கு செய்யப்படாமல் விட்டமையும் நன்மையாகவே  இருக்கும்

உமை நாடி கேட்பதும் உமை நினைத்து தொழுவதும் யம்மிடமிருக்க
உமையல்லால் யாரை தொழுவோம்
உமையல்லால் யாரிடம் கேட்போம்
உமக்கு இணையாக யாரையும்  சிந்திக்க மனம் வருமோ!

உம்மிடம் கேட்பது யம் கடமை
கடமையச் செய்து கேட்பது உயர்வு
கிடைத்தாலும் மகிழ்வோம்
கிடைக்கவில்லையென்றாலும் மகிழ்வோம்

No comments:

Post a Comment