Monday 18 March 2013

இறைவனை தொழுதிடு உன் கடமையை செய்திடு

தொல்லைகள் நம்மை தாக்கும்
தொல்லைகள் கவ்வ துயரம் சேரும்
துயரம் சேர மனம் தொய்வு விழும்
மனம் சோர ஆர்வம் மறையும் .

வேண்டியது கிடைக்க மனம் மகிழும்
வேண்டாதது கிடைக்க மனம் துவளும்
வேண்டியவருக்கு வேண்டாதது கிடைப்பதும்
வேண்டாதவருக்கு வேண்டியது கிடைப்பதும் இயல்பு

நினைத்த தெல்லாம் கிடைத்தால் வாழ்வில் வேகமில்லை
நினைத்தது கிடைக்காமலிருப்பதும்
நினைத்தது கிடைப்பதும் நம் கையில் இல்லை
கிடைத்ததைக் கொண்டு மகிழ்வு கொள்வது உயர்வு


இறைவனை தொழுதிடு அவன் படைத்ததர்க்காக
இறைவன் கொடுத்ததை மகிழ்வாக ஏற்றுக் கொள்
இறைவன் கொடுக்காமல் இருப்பதிலும் நன்மை இருக்கும்
இறைவனை தொழுதிடு உன் கடமையை செய்திடு

சுவனம் கிடைக்க  காரணம் வைத்து இறைவனை தொழுதல் சிறப்பல்ல
நரகம் கிடைக்காமல் இருக்க இறைவனை தொழுவதும் உயர்வல்ல
படைப்பின் ஆற்றல் பெற்றவன் இறைவன்
படைத்தவனுக்கு எது கொடுக்க வேண்டுமென்பது தெரியும்
படைத்ததர்க்காகவே இறைவனை தொழுது ஆத்மா திருப்தி கொள்

No comments:

Post a Comment