Sunday 24 March 2013

இறைவா ! உன்னிடமே நான் யாசிக்கிறேன்!


உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்

உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி நான் ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி நீ ஓடி வருவாய்

சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள்  அனைத்தும்  இறைவனது அருட்கொடை அது  உங்களின் ஒருவனாக நானும்  இருப்பதின்  வெளிப்பாடு . பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. பிறந்தவுடன் அரவணைத்து  வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின்  வேண்டுதல்களை நாடும் ஒருவனாக  இருப்பதிலேயே  உயர்வின்  அடித்தளமாக அமையும் . தூற்றுவோர்  இருக்க துவள வேண்டியதின்  நிலைப்பாடு  வேண்டாம் . வாழ்க்கை முடிந்த பின் தூக்கிச்  செல்வோர்  வசை பாடி இசை பாட  இறைவனும்  என்னை  கனலில் விட்டு  விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய்,  தேன் மதுரச் சுவையாய்  உளமார வாழ்துதலாய் இருக்கட்டும்  உங்கள்  வாய்  மொழி.

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]

No comments:

Post a Comment