Monday 25 March 2013

உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி

அம்மாவின் கருவின் நீர் தடாகத்தில்
அம்மாவின் அறிவின் ஊற்றில் மிதந்து
அம்மாவின் அறிவை கருவிலேயே உள்வாங்கி
அம்மாவின் மனம் மகிழ வந்துதுதித்த கவிஞன்

கவிஞன் பிறக்கிறான் கருவறையில் கற்பிக்கப்பட்டு
கலைஞன் கற்கிறான் கண்டதையும் கற்று
நடிகன் நடிக்கிறான் கண்டதையெல்லாம் பெற்றுவிட
பேச்சாளன் உருவாகிறான் தனக்குத்  தானே

அரசியல்காரன் அடுத்த தேர்தலை சிந்திக்கிறான்
நல்லாட்சி தர விரும்புபவன் பரம்பரையை  சிந்திக்கிறான்
சொல்லாட்சி கற்று பொய்சாட்சி சொல்கிறான்
மக்களாட்சி வேண்டி மக்களாட்சியை கலைக்கிறான்

உலகம் சுற்றுவதுபோல் ஆட்சி முறையும் சுற்றும்
மன்னராட்சி கெட மன்னர் கொடுங்கோலனாக மாற
மன்னராட்சியை கலைத்து உயர்ந்தோர் ஆட்சிக்கு வர
உயர்ந்தோர் உயர்வைப் போக்க கொடுங்கோலன் கையில் ஆட்சியை அடைய
மக்கள் புரட்சியால் மக்களாட்சி மலரும்
மக்களாட்சியில் ஊழல் வர திரும்பவும் சுழர்ச்சி முறைதான்
உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி 

No comments:

Post a Comment