Saturday 30 March 2013

ஆண்கள் மோசமானவர்கள் அல்ல!

உன்னை நேசிக்கிறேன்
உன்னையே நேசிக்கிறேன்
உனக்காக எதையும் செய்வேன்
உனக்காக காத்திருக்கிறேன்
உன் நிறம் எனக்கு முக்கியமல்ல
உன் அன்பையே வேண்டி நிற்கிறேன்
உன் விருப்பம் அனைத்தையும் நிறைவு செய்வேன்
உன் மகிழ்வே என் மகிழ்வு
உன் மடியில் உயிர் விடுவேன்
உன்னோடு கொண்ட காதல் உண்மையானது
உன்னையே மண முடிப்பேன்
இத்தனையும் காதல் வளர மண முடிக்க சொன்ன வார்த்தைகள்
இந்த வார்த்தைகள் அனைத்தையும் நம்பித்தானே திருமணம் முடிந்தது

சொன்னதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
உண்மையாக பொய் கலக்கவில்லை
திருமணத்திற்குப் பின் தனி குடுத்தினம் வருவேன் என்று சொல்லவில்லை
திருமணதிற்கு பின் எனது தாயை விட்டு பிரிந்து வருவேன் என்றும் சொல்லவில்லை
திருமணதிற்கு பின் உன் தாயோடுதான் இருப்பேன் என்றும் நீ சொல்லவில்லை
திருமணதிற்கு பின் நான் ஈட்டிய பொருளை உங்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பேன் என்றும் நீ சொல்லவில்லை


உங்கள் வீட்டு பொருள் கேட்டு நான் வற்புறுத்தவில்லை
உன் தாய் உனக்கு முக்கியம்போல் என் தாயும் எனக்கு முக்கியம்
உன் தாயை அழைத்து வந்து இங்கு வைத்துக் கொள்ள தடை போடவில்லை
உன் கருத்தோடு என் கருத்தோடு மோதி பிரிய வழி வைக்க பெண்களுக்குள் ஒற்றுமையில்லை

ஆண்கள் மோசமானவர்கள் அல்ல
ஆண்களை வழி கெடுக்கச் செய்வதும் தூண்டுவதும் யார்!
ஆண்களை 'வரதட்சணை  வாங்கச்  சொல்லி தூண்டுவதும் யார்!
ஆண்கள் சம்பாதிக்க அதனை பல ஆசைகளும் திட்டங்களும் போட்டு செலவு செய்ய தூண்டுவதும் யார்!

2 comments:

  1. தங்களின் மெயில் மூலம் இந்த தளம் தெரியும்... நன்றி...

    Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

    அருமையாக சொல்லி உள்ளீர்கள்... முடிவில் சிந்திக்க வேண்டிய கேள்விகள்...

    பழைய பகிர்வுகள் (தலைப்புகளைப் பார்த்தேன்) நேரம் கிடைக்கும் போது வாசிப்பேன்...

    வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    என்றும் அன்புடன் DD

    ReplyDelete
  2. அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிகக் நன்றி.
    தங்களது தொடர் சேவையாக மற்றவரை ஊக்குவிப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது .

    ReplyDelete