Monday 30 September 2013

நீ இல்லா இடத்தில நான் இருப்பதில்லை

உன் வார்த்தைகள் அழகானவை
உன் வரிகள் கவிதை நயம் கொண்டவை
உன்னைப்போல் உயர்வானதை யாரும் எங்கும் பார்க்கவில்லை
நீ பொய்யை பெற்றுருக்கவில்லை
நீ பெற்றிருப்பதெல்லாம் உண்மையன்றி வேறில்லை
நீ காலத்தின் நடப்புகள் மற்றும் அனைத்து உயர்வுகளையும் பெற்றிருக்கிறாய்

நீ உண்மையைக் எனக்கு காட்டி விடு
நீ மனதை மென்மையாய் ஆக்கி விடு
நீ மனதின் வடுக்களைப் போக்கி விடு
நீ வாழ்வின் வழி காட்டியாய் இருந்து விடு
நீ வாழ்வில் மன வலிமையைத் தந்து விடு

நீ என்னுடைய பெறற்கறிய சொத்து
நீ என்னோடு எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கிறாய்
நீ என்னுடைய சொத்தாய் இருந்து என்னை பாதுகாக்கிறாய்
நீ இருக்குமிடத்தில் நான் இருப்பேன்
நீ இல்லா இடத்தில நான் இருப்பதில்லை

நீ தான் என் வாழ்வின் தொடக்கம்
நீ தான் என் வாழ்வின் இறுதி வரை இருப்பாய்
நீ தான் அல்லாஹ் (இறைவன்)தந்த அருட் வாசகம்
நீ தான் நபி வழி வந்த இறை வேதம்
நீ காட்டிய வழிகளே என்னை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் .

1 comment: