Monday 2 September 2013

பாச இழைகளின் பரிமாற்றங்கள்

அம்மாவின் மகிழ்வான தகவல்
மகனே உனக்கோர் குழந்தை
மகனே உன்னைப்போல் அக் குழந்தை
நான் பாட்டி யானதால் பெருமை கொள்கிறேன்
தாயும் சேயும் நலம் .
நீல நிறக் கண்ணோடு குழந்தை
கண் கொள்ளா காட்சி தருகிறது
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும்
நீல நிறக் கண்ணோடுதான் பிறக்குமாம்
நீல நிறக் கண் நீடித்தால் நான் மகிழ்வேன்
நீலமோ .பழுப்போ கருப்போ குழந்தை நலமே பெரிது
--------------------------------------------

மகனின் பாச மடல்

அம்மா ! நீ பாட்டி பட்டம் பெற்று விட்டதை மனம் குளிரச் சொன்னாய்
அம்மா ! நான் இங்கிருந்து அந்த கண் கொள்ளா காட்சியைக் காண முடியவில்லை
அம்மா ! ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடுன்றது .அந்த நீரும் சூடாய் இருக்கிறது
அம்மா ! நீ என்னைப் பெற்றவுடன் சிறிது நேரத்தில் என்னை உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தது உன் நினைவில் நிலைத்து  நிற்கும் .
அம்மா ! அந்த நிலையே எனது மனைவிக்கும் கிடைத்திருக்கும் .
அம்மா ! உங்களோடு நானுமிருந்து மனமகிழ முடியவில்லையே என்ற எக்கம் என்னை வாட்டுகின்றது
வாழ்வை வளமாக்க  தேவையானதை சேர்க்க வெளிநாடு வந்து வேலை செய்யும்  வாழ்க்கை வேதனையாக உள்ளது .
பிரிந்து வாழும் காலங்களில் படும் வேதனை கொடுமையானது .
உயர்வான பந்த பாசங்களை பிரிந்து வாழும் நிலை நம் பரம்பரைக்கும் இனி வர வேண்டாம்
இறைவன் உங்கள் அனைவருக்கும் நலமான வாழ்வு தர பிரார்த்திக்கின்றேன்.

No comments:

Post a Comment