Sunday 29 September 2013

ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது


இரண்டு உயிர்கள்
இரண்டு உடல்
இரண்டு ஆன்மா
இரண்டும் இணைந்தது
இரண்டுக்கும் வந்தது ஒரு உயிர்
இரண்டின் கலவை ஒரு உருவம்
இரண்டுக்கும் மாறுபட்ட மனம்
இரண்டையும் அணைத்துப் போகும் மனமில்லை
இரண்டையும் வெற்றிக் கொள்ளும் குணமானது

தனக்கென தானே ஒரு வழி வகுத்துக் கொண்டது
தரணியில் தன்னை மிஞ்சுவாரில்லை என்ற இறுமாப்பு
தனித்து நின்று போராடி வெற்றி பெற வேட்கை கொண்டது
தன்னைத் தானே உருவாக்கும் வேட்கை
தனி மரம் தோப்பாகாது என்பதை மறந்து நின்றது
தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற ஏக்கம்
தான் அழிய தானே வழி வகுத்துக் கொண்டது
தான் அழிய மற்றவர் வாழ விரும்பவில்லை
தன்னை நோக்குவாரற்று சிதைந்துப் போனது

இருவர் சேர நாம் வந்தோம் என்பதை அறியாமல் போனது
ஆணவம் அழிவுக்கு வழி வகுத்தது
ஆணவம் அறிவை மறைத்தது
ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது

No comments:

Post a Comment