Tuesday 2 April 2013

தாவுதலும் பெருமையாக சொல்லப்படும்!

நாணயமின்றி நம்பிக்கை ஏது ?
நாணயமும் நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கம்

நன்னம்பிக்கை நாணயத்தினரோடு
நம்பிக்கையற்ற தன்மை நாணயமற்றோடு

உண்மை ஒன்றிருக்க பொய் ஒன்றிருக்கத்தானே செய்யும்
கவிதை ஒன்றிருக்க பொய்யும் மெய்யும் கலக்கத்தானே செய்யும்

தவறு  ஒன்றிருக்க தண்டனை கிடைக்கத்தானே செய்யும்
தண்டனை குறைவாக இருக்க குற்றம் பெருகத்தானே செய்யும்

தலைவன்  தவறு செய்துக் கொன்டே இருக்க
தொடர்வோரும் தவறு செய்யத்தானே செய்வர்

காசை கொடுத்து ஆட்சியை பெற்றால்
கொடுத்த காசை எடுக்கத்தானே செய்வர்

இனாம் பெற்று வாழ்வை ஓட்டுவோர்
இனாம் பெற ஓடத்தானே செய்வர்

கட்சிகள் பல இருக்க தாவுதலும் இருக்கும்
தாவுதலும் பெருமையாக சொல்லப்படும்

No comments:

Post a Comment