Wednesday 3 April 2013

யார் வெட்கப்படவேண்டும்!

 புகழ் வந்த பெரியவரைக்  கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது நமது  தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை  விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த  முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும். அவருக்கு கிடைத்த புகழுக்கு நாமும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும். நாம் ஏன் ஒதுங்கவேண்டும்!.ஒதுங்கினால் ஓரம் கட்டப்படுவோம்.

 இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும். அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும் . நேர்மையாக வாழும் நாம் நிமிர்ந்தல்லவா நடை வேண்டும்.

  வெட்கப்படுவது ஒரு மனோவியாதிக்கு  உட்பட்ட செயல்.  தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் முறை வேண்டாம். நம்மிடம் எதோ குறை உள்ளதாக கற்பனை செய்து நம்மையே நாம் தாழ்த்திக்கொள்வது ஏற்புடையதல்ல. தாழ்வு மனப்பான்மை நம்மை தாழ்த்திவிடும். நாம் தெரிந்தே தவறு செய்திருந்தால் மனம்வருந்தி திருத்திக் கொள்வது உயர்வு. திருந்தாது தவறு செய்வோர் வருத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அவரை நினைத்துதான் நாம் வெட்கப்பட்டு திருத்தமுயல வேண்டும். நம்மிடம் குறை இருப்பின் நம்மைக் காட்டிலும் கீழ்  உள்ளவரை நினைத்துப் பார்த்து அமைதியடைய வேண்டும்.
 உடல் மாற்றம் ஏற்படுவது இயற்கை. தலை முடியில் நரை விழுந்துவிட்டதே! கட்டையான உயரத்தில் அதிலும் குறிப்பாக கருப்பாக உள்ளோமே என்பது நம்மை தாழ்வாக மதிப்பதால் வரும் வினைதான்.  சுவையும், ரசிக்கும் தன்மையும் மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது . வேண்டாம் இந்த மனக்  கோளாறு . நம்மிடம் எல்லாம் உள்ளது இதனைக் கொண்டு எதனையும் செய்ய இயலும் என்ற உயர்ந்த நோக்கினை நம்மிடம் பொருந்திக்கொண்டு வாழ்வது சிறப்பு. வாழ்ந்து காட்டு. நல்லதை நாடு. வாழு. வாழ வழி விடு . இது போராடும் உலகம். போராடும் பொழுது உனது உள் மனதில்  உன் வெற்றிதான் உனக்கு முக்கியம். போரில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர்களுக்கே வெற்றி. முதல் வெற்றி அடுத்த  வெற்றிக்கு ஊன்று கோல். பொருந்திகொள்ளும் வாழ்வே வாழ்வின் வெற்றியின்  திறவுகோல். ஒதுங்காமல் ஒன்றி விட வேண்டும். நாம் நினைப்பது நடக்கும் என்பதில் நம்பிக்கை வைத்தாக வேண்டும். நம்மைக் காட்டிலும் தாழ்ந்தவரை எண்ணி அமைதி அடைய வேண்டும். நம்மை விட உயர்ந்தவரைக் கண்டு நம்மாலும் அவ்வாறு வர முடியும் என்ற எண்ணத்தில் வேகமாக விவேகமாக, காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும்.

முயற்சி  திருவினையாக்கும்.கடமையினை செய்வோம் , மற்றதனை இறைவனிடம் விட்டு விடுவோம். சுலபமாக வந்தது சுலபமாக போய்விடும் .கடின உழைப்பினால் வந்தது தங்கும்,உழைப்பின்அருமையினை,பலத்தினைஅறிந்ததால் அதனை இழக்க  விட மாட்டோம். வாழ்வே நம்பிக்கையின் அடிப்படை.

பெண்களை கண்டால் பார்வையைத் தாழ்த்தல் வேண்டும். ஆனால் வெட்கம் வேண்டாம். வெட்கம் என்பது ஆண் பெண்  இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. இந்த வெட்கம் மற்றவரை மதிக்கும் பொருட்டு வருவது.இது தேவையானது.

No comments:

Post a Comment