Wednesday 26 September 2018

Nidur _ Naivasal Mosques நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்கள்.

எனது வீட்டில் எதிரில் உள்ள பள்ளிவாசல் தற்போது எடுத்த படம்

Tuesday 18 September 2018

ஒரு பக்தனின் நன்றியுணர்வு



மழை
பனி
குளிர்
வெயில்
இவைகளுக்கு தாக்குப்பிடிக்க மட்டுமா ஆடை ?
அனைத்துக்கும் மேலாக மானத்தை பாதுக்காக்கும் ஆடை.

ஆடை அணிவது நாகரீகத்தின் வெளிப்பாடு .
வார்த்தைகளால் சொல்வது மட்டும் நன்றி அல்லது வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமோ ?
அது வெளிப்படும் இடம் உள்ளத்தின் நாதமாக இருத்தல் வேண்டும் .
இறைவா ! உன்னை நினைத்து உருகியவனாய் நன்றியுடையவனாய் இருப்பேன் .
அதனை மறைமுகமாகவும் .வெளிப்படையாகவும்
சொற்களினால் மற்றும் செயல்களால் வெளிப்படுத்தி
உன்னிடம் இறைஞ்சி நிற்ப்பேன்
அதற்கு உனது அருளும் அங்கீகாரமும் வேண்டும்
நன்றியுணர்வு இதயத்திலிருந்து தொடங்கி நாக்கு நரம்பு மண்டலத்திலிருந்து வெளிப்படுகின்றது

Thursday 13 September 2018

தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவு

திருமணத்தின் முதல் ஆண்டில், கலாச்சாரங்கள் மற்றும் சூழல்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக மோதல்கள், வீட்டில் உள்ள அதிகாரத்தை சுற்றி சுழலும்,
தம்பதிகளுக்கு இடையே இன்னும் சுதந்திரம், உரிமை.பெற முயற்சிக்கும் போது கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் உருவாகும் .ஒவ்வொருவருக்கும் அவர்களது உரிமைகள் தெரிந்திருந்தால் மட்டுமே, மோதல்கள் முடிவடையும், திருமணத்தின் முதல் வருடம் தேனிலவு காலங்களில் அப்பொழதுக்கு மாற்றங்கள் உருவாகலாம்