Saturday 29 November 2014

ஒவ்வொரு வினைக்கும் ஒவ்வொரு எதிர் வினை உண்டு

ஒவ்வொரு வினைக்கும்
ஒவ்வொரு எதிர் வினை உண்டு
For every action there is an equal and opposite re-action.
நட்பு நாடுகிறோம்
நட்பில் எல்லை இல்லை
கருத்தில் மாற்றம் இருக்கும்
ஆத்தீகமும் நாத்தீகமும் கொள்கையில் மாறுபடும்
மாறுபடுவது தனிப்பட்ட கொள்கை
நட்பு அன்பால் வருவது
நாம் நம் கருத்தை சொல்ல அவர் மாற்றுக் கருத்தை முறையாக சொல்ல முற்படும்போது அதனை கேட்டு நம் கருத்தையும் சொல்லி விளங்க வைக்க முயல்வதே கருத்துகளின் உண்மையான சிறந்த தகவல் பரிமாற்றங்கள்.அதனால் விரோதங்கள் வரக் கூடாது
அவரவரது மார்க்கம் மற்றும் கொள்கைகள் அவரவருக்கு உயர்வுதான்
ஒரே மரத்தில் காய்த்த பழங்களும் ,காய்களும் மாறுபட்டிருப்பது இயல்பு .மாறுபட்டதை காரணம் காட்டி மரத்தையே நாம் வெட்டி சாய்ப்பதில்லை . இது கல்ப்படமல்ல காய்த்தது .

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது

Monday 24 November 2014

நேரமிருக்கு


நேரமிருக்கு
சக்தியிருக்கு
பணமில்லை '-வாலிபன்

பணமிருக்கு
சக்தியிருக்கு
நேரமில்லை - தொழிலாளி

நேரமிருக்கு
பணமிருக்கு
சக்தியில்லை - முதுமையானவன்

கிடைத்ததை பயன்படுத்திக் கொள்
அனைத்தும் அனைத்து காலங்களிலும் கிடைக்காது
- தத்துவம் பேசுபவன்
முகம்மதது அலி
Mohamed Ali

செழுமையான பூங்காவாகி நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்


என் தாயை வாங்கி வளர்த்தார் உன் தாய்
என் தாய் உன் வீட்டில் என்னைப் பெற்றாள்
என் தாய் என்னை பாலூட்டி வளர்த்தது போல்
உன் தாய் உன்னை பாசமாய் வளர்க்கின்றாள்
உனக்கென்ன வருத்தம்

ஏன் உன் தலையை தரையில் தாழ்தினாய்
என் தாய் என்னை உதைத்தாலும்
என் தாயின் உதை எனக்கு உறுத்தாது
என் தாயினிடமே திரும்ப ஓடி நிற்ப்பேன்
என்னை பாசமாய் வளர்க்கும் உனக்கும்
என் குணம்தானே வரவேண்டும்

எழுந்திரு
எனக்காக எழுந்திரு
என்னோடு விளையாட
உன்னை விட்டால்
எனக்கு யார் உள்ளார்
நிமிர்ந்தெழு
உன்னை அறிந்த நெஞ்சே
உன்னை நிமிர்த்தி வைக்கும்

நாம்
மரங்கள் போல் வளர்ந்து
செழித்த கிளைகளை விளரவிட்டு
விதைகளை விழச் செய்து
செழுமையான பூங்காவாகி
நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்
முகம்மதது அலி
Mohamed Ali

Thursday 20 November 2014

நல்லதை நாடு

தினமும்
கவனித்து
சிந்தித்து
திருத்தி
திருந்து
நல்லதை நாடு
நாடியதை சரி செய்
சரி செய்ததை செம்மை செய்

கணினியும்
சீராக இயங்க
சுத்தம் செய்தலும்
புதிப்பித்தலும்
மேம்படுத்தலும்
புதுப்பித்தலும்
அவசியம்

கன்னியும்
முகநூலில்
நுழைந்தாலும்
கன்னியாகவே
வெளியேற
கவனம் செலுத்தி
கண்டதையும் காணாமல்
களங்கம் வராமல்
நல்லதை கற்று
அல்லவை ஒதுக்கி
புதுமை பெற்று
உயர்வு பெற்று
பெருமை பெற்று
சிறப்பு அடைதல்
சிறப்பு

Monday 17 November 2014

முத்தத்திற்கு ஒரு போராட்டமானால் முத்தங்கள் தன் மதிப்பை இழந்து விடும்

முத்தம் கொடுடி என்றேன்
உங்களுக்கு வேறு வேலை இல்லையா! என்றாள்

முத்தத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் என்றேன்
நீங்களும் போய் பேசுங்கள்
உங்களுக்கு வெட்கமில்லையென்றால் என்றாள்

நான் முத்தத்தை அறிந்துக் கொள்ள அங்கு செல்கிறேன் என்றேன்
இத்தனை காலங்கள் நீங்கள் கொடுத்தது அதுவல்லையாஎன்றாள்

உங்களை நான் தடுத்தாலும் எனக்கு அறியாமல் செல்வீர்கள்
நமக்குள் நடந்ததை சொல்லாதீர்கள் என்றாள்

பாசங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படும்போது நேசங்கள் உறுதியாக்கப் படுகின்றன

அன்பு ,பாசம் ,நேசம், காதல் அனைத்தும் இதயத்தின் வெளிப்பாடு
இதயத்தின் உணர்வுகள் இயல்பாய் உந்தப்படுவது
மழையால் கொட்டப்படும் நீரை தடை போட்டு நிறுத்த முடியாது
இதயத்தில் வெளிப்படும் நேசத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது

நேசம் ஒரு தெளிந்த நீரோடை
நேசத்தை நெஞ்சத்தில் நிறுத்தி வைக்காமல்
நேசத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்

Monday 10 November 2014

உள்ளங்கள் தூய்மையானால் அனைத்தும் சரியாகிவிடும்

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்
வயதை வைத்து மரியாதை கிடைக்கப் போவதுமில்லை
வயதைப் பார்த்து மட்டும் பார்த்து பெண் கொடுக்கப் போவதுமில்லை
வயது வந்தமையால் உய்ர்த்திவிடப் போவதுமில்லை
வயது வந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் தேவையா என்பார்கள்
கிழடான கவிஞன் கன்னிகளை கவிதையாக வர்ணித்தால் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவனும் இளமையானவனும்

அந்த நாட்கள் மீண்டும் வராது !

பார்த்தோம்
நண்பனானோம்
விளையாடினோம்
பகிர்ந்து அருந்தினோம்
கிடைத்ததை பாதியாக கடித்து கொடுத்து தின்றோம்
மின்சாரம் வருமென படிப்பதை தள்ளிப் போடவில்லை
கிடைத்த வெளிச்சத்தில் படிக்க வேண்டியதை படித்தோம்

தாகம் வர நினைத்த இடத்தில நீரை குடித்தோம்
தாகம் வர சுகாதார காப்ப்பீடு பெற்ற நீரை நாடவில்லை
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டவுமில்லை
கிடைத்த இடத்தில விளையாடினோம்
விளையாடுவதற்கு இடம் தேடி அலையவில்லை
மருத்துவரை நாடி போகவில்லை
மருத்துவர் வேண்டிய நேரத்தில் வீடு தேடி வந்தார்

கால மாற்றம்
பார்க்காமலேயே நண்பர்கள்
கருப்பு வெள்ளை நிறமில்லாது
நிறங்கள் கொடுக்கப்பட்டவர்கள் பார்க்காமலேயே நண்பர்கள் ஆகிறார்கள்
படங்கள் போட்டு உண்டதை காட்டி நம் பசியை தூண்டும் நண்பர்கள்
போடும் படங்களிலும் போலியானவைகளும் உண்டு
எதை வைத்து நண்பர்களானாலும்
வாழ்வில் பாராமலேயே நண்பர்களாக இருப்பார்கள்
இடைப்பட்ட காலத்திலும் எழுதும் வார்த்தைகள்
நண்பர்களை விலக்கியும் விடலாம்

-முகம்மது அலி ஜின்னா 


அடங்கி ,அடக்கி போனதால் வந்த கேடு

கோபம் வருவதுபோல் செயல்படுகின்றனர்
கோபத்தை அடக்கிக் கொண்டேன்

நீரை அதிகமாக குடித்து விட்டேன்
நீரை வெளியேற்ற பொருத்தமான இடம் கிடைக்கவில்லை
நீரை வெளியேற்றாமல் அடக்கிக் கொண்டேன்

சாப்பிட்டது சரியில்லை
வயிற்றை கலக்கியது
வந்ததை அடக்கிக் கொண்டேன்

பருவத்தில் திருமணம் செய்விக்கப் படவில்லை
பருவத்தில் வரும் விருப்பத்தையும் அடக்கிக் கொண்டேன்

அடக்கி அடக்கி ஆயிரம் வியாதிகள் வந்து சேர்ந்தன
அந்த பிரச்சனை மனிதர்களைத் தவிர மற்றதற்கில்லை

மற்றவைகளுக்கு அடக்கும் குணம் இல்லாமையால்
மற்றவைகளுக்கு வரும் வியாதிகள் மனிதருக்கு வருவதுபோல் வருவதில்லை

(நீர் வியாதி .இதய வியாதி அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சில..)

நான் எங்கிருந்தாலும் நானேதான்!

நான் 
ஊர்லே நவாப்ஷா
வெளியூர்லே பக்கிர்ஷா

ரோமுக்கு போனால் ரோமானியனாவேன்
ரோமானியர் என்னை அழைப்பதோ இந்தியன்
மேலப்பாளையம் போனால் மேலப்பாளையனாவேன்
மேலப்பாளையத்தில் உள்ளவர் என்னை அழைப்பதோ நீடூரான்

எங்கு இருந்தாலும் நான்
எப்படி இருந்தாலும் நான்

என்ன என்னிடம் இருந்தாலும் நான்
என்னை எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் நான்தான்
எனக்கு நானே எத்தனை பெயர் சூட்டிக் கொண்டாலும் நான்தான்
எனக்கு உயிர் உள்ளவரை அத்தனை பேரும் சுற்றி வரும்
என்னிடம் உள்ள உயிர் என்னை விட்டு அகன்றால்
என்னை விட்டு அத்தனை பேரும் அகன்றுவிடும்
அத்தனை பெயரும் எனக்கு புதுப் பெயர் சூட்டுவர்
எனக்கு சூட்டும் பெயர் மொவுத் (பிணம் )
எனக்கு அந்த பெயரும் சில மணி நேரங்கள் தான்
 
-முகம்மது அலி ஜின்னா 
*********************************************************************
 நான்????? வெகு இயல்பான தேடல் வரிகள்: வாழ்த்துகள்.
இராஜ. தியாகராஜன்
****************
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் உள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்!
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே
சுண்ணாம்பாய் வெண்சங்கு சூளையிலே சுட்டதுபோல்
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!