Saturday 25 May 2019

நேருக்கு நேர் சன் நியூஸ் இப்பொழுது பார்த்தேன்.

நேருக்கு நேர் சன் நியூஸ் இப்பொழுது பார்த்தேன். மனம் நெகிழ்ந்தேன்.பழைய நினைவுகள் மனதில் வந்தன. முரசொலி அலுவலகத்தில் கலைஞர் வீட்டிலிருந்து வந்த மீன் குழம்பு சாப்பிட்டது மறக்க முடியாது. செல்வி அவர்கள் வீட்டின மாடியில் இருந்த துணிக் கடையில் நானும் எனது மனைவியும் காட்டன் புடவைகள் வாங்கி இருக்கின்றோம்.முன்பு ஒருமுறை தேர்தல் நேரத்தில் மயிலாடுதுறை நிலவரம் பற்றி செல்வி அவ்ர்கள் தொலைபேசி வழியாக நீடூருக்கு போன் போட்டு என்னிடம் விசாரித்ததும் உண்டு இன்னும் பல மகிழ்வான தருணங்கள் உண்டு . Mohamed Ali: "kalaignar memorial | kalaignar Daughter selvi Interview | Gopalapuram House |"

Wednesday 1 May 2019

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

ஒரு புதிய தாள் மீண்டும் எழுத -

வாழ்க்கை புத்தகத்தை .....
நீங்கள் திறக்க இருக்கிறீர்கள் -

நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ...

பணம்,

சொத்து,

கௌரவம்???

நாம் இறக்கும் போது,

நம் பணம், சக்தி , சொத்து ...

மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...

வேறு யாருக்காவது சொந்தமாக!

மீதி நாம் நமக்காக விட்டுச் செல்வது என்ன உள்ளது?

நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன. அதுவும் நாம் மற்றவருக்கு உதவி செய்திருந்தால் அதுவும் காலத்தால் மறக்க முடியாத நிலையாக இருக்கக் கூடியதாக இருந்தால்!