Saturday 11 July 2015

நோன்பு நோற்றதால் நிறைவு கொள்கின்றேன்

நோன்பை கடமையாக்கினாய்
நோன்பை நாங்கள் நேசிக்கின்றோம்
நோன்பு நோற்றதால் நன்மைகள் கூடும் என்கிறாய்
நோன்பு வைத்தால் பாவங்கள் குறையும் என்கிறாய்
மற்ற பலன்களை எதிர்பார்க்க வில்லை
நோன்பு நோற்றதால் நிறைவு கொள்கின்றேன்
மற்றதை உன்னிடம் விட்டு விட்டேன்
முற்றிலும் அறிந்தவன் நீ
நோன்பால் நாங்கள் அடையும் நிம்மதியே உயர்வானது
நோன்புக் காலத்தில் அடையும் உயர்வும் ,மதிப்பும் ,நிம்மதியும்
நீ கொடுத்த அருள்
உனக்கே அனைத்து புகழ் அனைத்தும்

நாட்டில் பஞ்சம்
இறை நேசத்தால்
ஓயாத உழைப்பால் உணவில் பஞ்சமில்லை
இறை நேசம் அதிகமானதால் கற்பனையில் பஞ்சம்
இறைநேசத்தால் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்க
நாவில் உமிழ்நீர் சுரப்பதில் பஞ்சமில்லை
நோன்புக் காலத்தில் உண்ணாததால் உடலில் சோர்வு இல்லை
நோன்பின் மாண்பே மாண்பு
இயல்பான வாழ்வை தொய்வில்லாமல் தொடர முடிகின்றது
இந்த அருளை தந்த புனித மனம் உருவாக்க இறைவன் தந்த மாண்பே மாண்பு
காலமெல்லாம் அவனுக்கு நன்றி உரித்தாகட்டும்

No comments:

Post a Comment