Sunday 30 August 2015

பெற்றோர்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்களைப் பேசுகின்றன ,
உங்கள் குரல் உங்கள் வலி மற்றும் துன்பம் அனைத்தையும் மறைத்து விட்டு ஒலித்து இசைக்கின்றது

உங்கள் மென்மையான கருணையான இதயம்
எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்து,
எங்கள் பாசத்தை உயர்வடையச் செய்கின்றது
ஒவ்வொரு கணமும் ஒரு புதிய ஆரம்பமாய் அலை வீசுகின்றது

உங்கள் வார்த்தைகள் மற்றும் நிலையான பாதுகாப்பு கொண்ட
உங்கள் மென்மையான மற்றும் உங்கள் பாசமான அணுகுமுறை
அது எப்போதும் எங்கள் மனதில் ஊஞ்சலாய்
அமைதியாக தென்றலாய் நெருடுகின்றது

நீங்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் அருளால் உயரிய உயிரைக் கொடுத்து நேசித்தீர்கள்
நீங்கள் இப்போதும் மற்றும் எப்போதும் அல்லாஹ்வின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

No comments:

Post a Comment