Wednesday 1 April 2020

சீரழிவு யாரால் உருவாக்கப்பட்டன !

விண்வெளி ஆய்வு ,
ஆயுத தயாரிப்பில் போட்டி
இனப்பாகுபாடு
மதவெறி
நாட்டுக்கு நாடு போர் வெறி
இத்தனையும் செயற்கையில்
மக்களை அழிக்க முற்பட
இயற்கையிடம் தோற்றுப்போனது

பசியால் வாடிய மக்களை பாதுகாக்க முயற்சியில்லை
ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பசியால் சாவு
இயற்கையின் ஆதரவு குரோனாவின் காற்று அப்பக்கம் வீசவில்லை
ஈராக் ,லிபியா ஆப்கானிஷ்தான் காஸ்மீர் ஏமன் பர்மா
இந்நாடுகளில் ஏற்படும் சீரழிவு
யாரால் உருவாக்கப்பட்டன !

மனித நேயமற்ற செயல்பாடுகள்
உங்களுக்குள் ஒற்றுமையில்லை
தவறான ஆய்வுகள் தண்டனையாகின
முறையற்ற செயல்கள் அழிவை தேடித் தந்தன


பெரிய சாத்தனிடம்
சின்ன சாத்தான் அடிமையாகி
சாதித்தது அழிவுதான்

மக்களை பிரிவு படுத்தாதீர்கள்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

No comments:

Post a Comment