Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Thursday, 4 December 2014

'அருமை நிச்சயமாக படிக்கிறேன் என்றார்'

இரவு கணினியில் அசைபோட்டு விட்டு
இனிய மென்மையான இசையை கேட்டுக் கொண்டே
இருக்கும்போது என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்
இரவு ஒரு மணிக்கு உறக்கம் கலைந்தது
ஊரெல்லாம் ஒரே அமைதி
லேசான மழைத் தூரல்
தூக்கம் கலைந்தது
அங்கும் இங்கும் அசைந்து படுத்தாலும்
அயரத் தூங்க முடியவில்லை

திரும்பவும் கணினி திறப்பு
கணினியில் என்னைபோல்
நெருங்கிய நண்பர் உலாவிக் கொண்டிருந்தார்

'இன்னும் தூங்கவில்லையா!' என்றேன்

'ஏனோ தெரியவில்லை இன்னும் தூக்கம் வரவில்லை' என்றார்.

'முத்தம் என்றொரு கட்டுரை எழுதியிருந்தேனே...' பார்த்தீர்களா என்றார்
நான் மட்டும் விடுவேனா !
'கடல் அலை வீசியதோ' என்று நான்  எழுதியதைப் பார்த்தீர்களா என்றேன்
(எனது முகநூல் ஸ்டேடஸ்)
-கடல் அலை வீசியதோ
காதல் வலை வீசியதோ

நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!