Showing posts with label நேசிக்கும் மனம். Show all posts
Showing posts with label நேசிக்கும் மனம். Show all posts

Monday, 8 April 2013

காதலித்துப் பார் கடமையில் மூழ்கிடுவாய்!

உனையறிந்தால் உன் கடமையை செய்வாய்
உன் கடமையச் செய்ய மார்க்கத்தை தேடுவாய்

சுவனத்தின் ஆரம்பம் ஆதம் அவ்வா நேசத்தில்
சுகம் தரும் நேசம் நாட நம் விழிகள் திறக்கும்
விழிகள் திறக்க நெஞ்சத்தில் ஈரம் சுரக்கும்
ஈர இதயம் மார்க்கத்தைத் தேடும்
மார்க்கம் மனதில் வந்தடைய மனித நேயம் பிறக்கும்
மனித நேயம் வாழ்வை சிறப்பாக்கிவிடும்
வாழ்வின் சிறப்பு மார்க்கத்தின் ஒளிவிளக்கு
மார்க்கம் இறைவனை தேடவைத்து மார்க்கத்தின் மகிமை அறிய வைக்கும்
மார்கத்தின் மகிமையால் இறையோனை இறைஞ்ச வைத்து உள்ளம் உயர்வடையும்