Showing posts with label பழைய பத்திரிக்கை. Show all posts
Showing posts with label பழைய பத்திரிக்கை. Show all posts

Saturday, 23 November 2013

இனாமுக்கும் மதிப்பு இல்லாத நிலை!


 எனது நண்பர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளும், கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும், வழிகாட்டி குறிப்புகளும் பல பத்திரிக்கையில் வந்தது. அதனால் அவருக்கு சிறிது வருமானமும் கிடைத்தது.

அவருக்கு நீண்ட கால ஆசையாக அதனை சேமித்து ஒரு புத்தகமாக வெளியிட விரும்பினார் .

 அந்த விருப்பத்தை நிறைவேற்ற தனது எழுத்துக்களால் கிடைத்த வருமானத்தை வைத்து மிகவும் செலவு செய்து குறைந்த ஆதாயம் வரும் நோக்கத்துடன் ஒரு புத்தமாக வெளியிட்டார். அவர் எதிர்பார்த்தபடி அந்த புத்தகங்களை யாரும் வாங்கவில்லை. அதனால் அச்சிட்ட அந்த அருமையான, அழகிய புத்தகங்கள் தேங்கிக் கிடந்தன. அதனால் அவர் மனம் மிகவும் வேதனை அடைந்தது. இதனை என்னிடம் சொல்லி வருத்தப் பட்டார்.
நான் அவருக்கு சொன்னேன் 'புத்தகங்கள் கரையான் பிடித்து அழிந்து போவதைக் காட்டிலும் அந்த புத்தகங்களை இனாமாக கொடுத்து விடு. மக்கள் படித்து பயன் பெறட்டும். அதனால் உனக்கு நன்மை வந்து சேரும்' என்று