Showing posts with label பாவமன்னிப்பு. Show all posts
Showing posts with label பாவமன்னிப்பு. Show all posts

Tuesday, 9 December 2014

நோயும் மனதிற்கு ஓர் நல்மருந்துதான்


உன்னை நீ அறிந்தால் உயர்வடையலாம்
நோயும் மனதிற்கு ஓர் நல்மருந்துதான்

தான் என்னும் அகம்பாவம்
தன்னால்தான் என்னும் தற்பெருமை
தன்னால்தான் எதுவும் முடியும் என்னும் செயல்பாடு
தன்னோடு பாவமான செயல்களையும் சேர்த்துக் கொள்கின்றன

தனக்கு நோய் வர தான் என்ற அகந்தை அகல்கின்றது
தான் செய்த செயல்களின் வெளிப்பாடு
தன்னை உணர வைக்க உதவுகின்ற காரணிக்ளாய் வருபவைகள்
பணிவு ,கண்ணீர் மற்றும் நோய்

திமிர் கொண்ட மனமுடையோர்க்கு
நோய் வருவதும் நன்மையாகவும் அமைகின்றது

அன்றாடம் பாவங்களைச் செய்பவன் பாவங்களை அறியான்
அனறாடம் பாவமன்னிப்பு நாடாதவன்
பட்டன போக பாவமன்னிப்பை பெறாமல்
பாவங்களை சுமந்துச் செல்கின்றான்

நோய் வந்ததால் பணிவும் வந்தடைகின்றது
பணிவு வந்ததால் பாவமன்னிப்பு நாடி கண்ணீர் சிந்துகின்றான்
சிந்திய கண்ணீர் அவனது பாவங்களைக் கரையச் செய்கின்றன
அமைதி மனதில் வந்தடைய நற்செயல்களை நாடுகின்றான்
நற்செயல்களை செய்தமையால் நிம்மதியாக இறக்கின்றான்

"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 5678

Thursday, 3 October 2013

பாவ மன்னிப்பு

தெரிந்ததை சொன்னேன்
தெரியாததை சொல்லத் தெரியவில்லை

அறிந்த தவறுகள் பல
அறியாத தவறுகள் சில

சொல்வதையும் சொல்லாததையும் நீ அறிவாய்
செய்ததையும் செய்யாததையும் நீ அறிவாய்

மறந்ததை மறக்க நினைத்ததையும் நீ அறிவாய்
கடந்தவை கரைய செய்த தவறை மன்னித்து விடு

மறந்தும் இனி எத் தவறும் செய்ய மாட்டேன்
சிறந்து இனி இருக்க உன் அருள் வேண்டி நிற்ப்பேன்