Showing posts with label வரதட்சனை. Show all posts
Showing posts with label வரதட்சனை. Show all posts

Friday, 11 October 2013

சீதனம் கேட்டதால் (வரதட்சனையால்) இழந்தது

சீதனம் தரவில்லை
மணமகன் வரமாட்டான்
மணமகன் பெற்றோர் சொன்னது

சமாதானம் பேசப்பட்டது
சீதனம் வருமென்று

மணமகன் மணமகள் வீட்டிற்க்கு போனான்
மணமகளை பார்த்தான் கொஞ்சினான்

போன மகன் மணமகள் வீட்டிலேயே தங்கி விட்டான்
பெற்ற மகனையும் இழந்தார்
சீதனத்தையும் இழந்தார்
சீதனம் கேட்ட பெற்றோர்

ஆண் கொடுத்து முடிக்க இருக்க
பெண் கொடுத்து முடிப்பது ஆண்மையோ!

மகர் கொடுத்து முடிப்பதே திருமணம்
சீதனம் கேட்டு முடிப்பது திருமணமாகுமோ!

மணம் இருமனத்தால் இணைவது
மனம் பணத்தால் இணையுமோ !

Friday, 19 July 2013

வழிவகுத்தது வளைகுடா நாடுகளின் திறப்பு !

ஊரெல்லாம் ஊர் சுற்றும் மணமாக வாலிபர்கள்
வீடெல்லாம் வயது வந்த மணமாகா கன்னிப் பெண்கள்

பெண்ணுக்கு மணமுடிக்க பொருத்தமற்ற வாலிபன்
பெண்ணுக்கு மணமுடிக்க வாடும் பெற்றோர்

வாலிபர்கள் வளம் பெற வழிகாட்டியது வளைகுடா நாடுகள்
வாலிபர்கள் படையாக புறப்பட்டனர் வளைகுடா நாடுகள் நோக்கி

வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வாலிபனுக்கு மரியாதை வந்தது
வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வாலிபனுக்கு பெண்ணை மணமுடிக்க விரும்பினர் பெற்றோர்

தேங்கிக் கிடந்த மணமாகாத பெண்கள் மணமுடிக்கப் பட்டனர்
ஊர் சுற்றும் மணமாக வாலிபர்கள் கூட்டம் குறைந்துப் போனது

வளைகுடா நாடுகளிருந்து விசாவோடு வந்த வாலிபனுக்கே பெண் தரும் காலம் வந்தது
வளைகுடா நாடுகளில் பொருள் ஈட்டியோர் தான் பட்ட சிரமத்தினை தம் பிள்ளைகள் பெற வேண்டாமென பிள்ளைகளை படிக்க வைத்து சிறப்பாக்கினர்