Monday 18 November 2013

முன்னால் போ, பின்னால் வருகிறேன்.


மேகங்கள் மோதின
இடி இடித்தது
ஒலியை உண்டாக்கியது

இடி இடித்ததால்
மின்னல் ஒளியை தந்தது

இடியின் ஒலி தாமதிக்க
மின்னல் ஒளி முந்திக் கொண்டது

இடிபோன்று ஒலித்த கடஞ் சொற்கள் வேகமாய் தாக்க
இமைகள் துடிக்க விழிகளின் ஒளியை மறைக்க தாமதித்து கண்ணீர் வழிந்தன


சொல்லிய சொற்கள் கடுமை
சொல்லியவரின் மனம் சிந்திக்கவில்லை

சொல்லை கேட்டவரின் மனம் சிந்தித்து
சொல்லை கேட்டதால் மனம் வாடியது

வார்த்தையை கொட்டிய மனம் கொதித்தது
வார்த்தையை கேட்டு வாடிய மனம் விழிகள் நீரை கொட்டின

எண்ணங்கள் முந்திக் கொள்கின்றன
எண்ணங்களால் வந்த செயலின் விளைவுகள் பிந்திக் கொள்கின்றன .

சிந்தனைகள் செயலை தூண்டுகின்றன
செயலின் ஆக்கங்கள் முடிவாகின்றன

தத்துவம் வித்திடுகின்றது
தத்துவம் தந்த வித்து விஞ்ஞானக் கனியை தருகின்றது

1 comment:

  1. "சொல்லிய சொற்கள் கடுமை
    சொல்லியவரின் மனம் சிந்திக்கவில்லை"

    ----உண்மையும் அழகும் நிறைந்த வரிகள் !!! :)

    ReplyDelete