Saturday 3 December 2016

ஊடுருவும் பார்வை

ஊடுருவும் பார்வை
சுவை பார்க்கும் நாக்கு
சிந்திக்கும் மூளை
செயல்படும் கை
தொடர்ந்து ஓடும் குருதி
துடிக்கும் இதயம்
இடம் விட்டு நகர உதவும் கால்கள்
கேட்டு அறியும் செவிகள்
இன்னபிற அங்கங்கள் பெற்றாய்
இவைகளைக் கொண்டு வாரிசுகளையும் உருவாக்கினாய்
இவைகளை உமக்களித்த இறைவனுக்கு நன்றி செய்து அவனைத் தொழுதாயா !
அங்கங்கள் செயல்பட உலகில் உலாவருகின்றாய்
அங்கங்கள் செயல்படும் திறனை இழக்க இருந்த இடத்தில் மூலையில் முடங்குகின்றாய்

முடங்கிய பின் முதிர்ச்சி பெற்று இறைவனின் ஆற்றலை சிந்திக்கின்றாய்
மாண்புடைய இறையோனின் அருள் நாடி அழுகின்றாய்
இறையோனின் அருள் பெற்று நலம் பெற்று திரும்பிய நிலையில்
இறையோனின் நினைவில் சில நாட்கள் இருக்கின்றாய்
இறையோனின் நினைவு சில நாட்கள் இருந்து உன்னை விட்டு அகல்கின்றதேன்!
நன்றி மறப்பதும் நல்லதை நினைக்க மறப்பதும் மனிதனோடு உடன்பிறந்த செயலானதேன்!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. குறள் 110:

No comments:

Post a Comment