Sunday 10 November 2019

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்
வயதை வைத்து மரியாதை கிடைக்கப் போவதுமில்லை
வயதைப் பார்த்து மட்டும் பார்த்து பெண் கொடுக்கப் போவதுமில்லை
வயது வந்தமையால் உயர்த்திவிடப் போவதுமில்லை
வயது வந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் தேவையா என்பார்கள்
கிழடான கவிஞன் கன்னிகளை கவிதையாக வர்ணித்தால் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவனும் இளமையானவனும்

கவிதை புனைவது கவிஞருக்கு விருப்பம்
கவிதை படிப்பது மாணவருக்கு அவசியம்
கவிதையின் பொருள் அறிவது பலருக்கு சிரமம்
கவிதை படத்தில் பாட்டாக வர பலரும் புரிகின்றனர்


கவிதை பணத்துக்காக புனையப் படுகின்றது
கவிதை மனதின் ஆழத்தை அறிய வைக்கின்றது
கவிதை எழுதுவது கவிஞரின் கலை
கவிதை இசையாக மனதை தொடுகின்றது

கவிஞன் காதலியை தேடுவதில்லை
கவிஞனை காதலிப்போர் நிறைந்திருப்பர்
கவிஞன் கற்பனைக்கு உரிமையானவன்
கலைஞன் கற்றதை வெளிப்படுத்துபவன்
கவிஞன் காணாததை கவிதையில் சொல்வான்
கவிஞன் கண்டதையும் கவிதையில் சொல்வான்
கவிஞன் காணாததையும் கண்டதையும் நயமாக சொல்வான்
கவிஞன் கற்பனை வெள்ளத்தில் நீந்துவான்

கவிஞனின் பெயரில் ஒளிவு மறைவு இருக்கும்
கவிஞனின் கவிதை கருத்திலும் உண்மை மறைந்திருக்கும்
கவிஞனின் கவிதை பொய்யால் புனைக்கப் பட்டதல்ல
கவிஞனின் கவிதை மெய்யால் மிகைப் படுத்தப் பட்டிருக்கும்

கவிஞன் வார்த்தையால் விளையாடுவான்
கவிஞன் வாய்மையால் கலைஞனாவான்
கவிஞன் வாழ்த்துவதில் கவிதையாய் தந்து மகிழ்வான்
கவிஞன் வாழ்தப்படுவதில் கவிஞனின் கவிதைகள் மணம் வீசும்

No comments:

Post a Comment