எல்லா நிலைகளிலும் இன்னிலையில் இருக்கப் போவதாக நினைக்கிறாய்
இல்லா நிலையிலிருந்து இன்னிலைக்கு உருவாக்கியவனை நினைக்க மறந்தாய்
எவ்வழியில் போவதென்றும் அறிந்தவனாய் இல்லை
எவ்வழியிலிருந்து வந்தவனென்று அறிந்தவனாய் இல்லை
உயிர்பெற்று விழும்போது கதறினாய்
உயிரற்று விழும்போது கதறுவார்கள்
உயிரோடு விழும்போது தாங்கிப் பிடித்தது பூமி
உயிரற்று விழும்போது விழுங்க வைத்து மூடி விடுவர் பூமியில்
ஆத்மா நிலையிலிருந்து ஆன்மா நிலைக்கு மாறினாய்
ஆன்மா நிலையில் உனை உயர்வாக்கிக் கொள்ள
ஆத்மா நிலையில் உயர் நிலையில் வாழ்ந்து விடு
ஆன்மாவும் ஆத்மாவும் இறைவன் அருள் பெற உயர்வாகி விடும்
