Showing posts with label ஆண்கள். Show all posts
Showing posts with label ஆண்கள். Show all posts

Monday, 14 October 2013

கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்


அலைபாயும் கண்கள் ஆண்கள் கண்கள்
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்

ஆண்களை அறிய அவர்கள் செயலைப் பார்
பெண்களை அறிய அவர்கள் கண்களைப் பார்

பெண்களின் இதயம் ஓர் ஆழ் கடல்
ஆழ் கடலில் மூழ்கி முத்தைப் பெறு

பெண்களின் உள்ளம் அறிய கண்களை உற்று கவணி
பெண்களின் உள்ளம் கண்களில் ஒளிந்து உள்ளது

ஆண்களின் கோபம் இடியோடு வரும் மழை
பெண்களின் கோபம் இடியற்று கொட்டும் அருவி

ஆண்களின் நட்பு காரியம் நாடி நிற்கும்
பெண்களின் நட்பு மனதை நாடி நிற்கும்

ஆண் சேர்த்து மனைவியிடம் கொடுப்பான்
பெண் சேர்த்து தாயிடம் கொடுப்பாள்

Saturday, 30 March 2013

ஆண்கள் மோசமானவர்கள் அல்ல!

உன்னை நேசிக்கிறேன்
உன்னையே நேசிக்கிறேன்
உனக்காக எதையும் செய்வேன்
உனக்காக காத்திருக்கிறேன்
உன் நிறம் எனக்கு முக்கியமல்ல
உன் அன்பையே வேண்டி நிற்கிறேன்
உன் விருப்பம் அனைத்தையும் நிறைவு செய்வேன்
உன் மகிழ்வே என் மகிழ்வு
உன் மடியில் உயிர் விடுவேன்
உன்னோடு கொண்ட காதல் உண்மையானது
உன்னையே மண முடிப்பேன்
இத்தனையும் காதல் வளர மண முடிக்க சொன்ன வார்த்தைகள்
இந்த வார்த்தைகள் அனைத்தையும் நம்பித்தானே திருமணம் முடிந்தது

சொன்னதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
உண்மையாக பொய் கலக்கவில்லை
திருமணத்திற்குப் பின் தனி குடுத்தினம் வருவேன் என்று சொல்லவில்லை
திருமணதிற்கு பின் எனது தாயை விட்டு பிரிந்து வருவேன் என்றும் சொல்லவில்லை
திருமணதிற்கு பின் உன் தாயோடுதான் இருப்பேன் என்றும் நீ சொல்லவில்லை
திருமணதிற்கு பின் நான் ஈட்டிய பொருளை உங்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பேன் என்றும் நீ சொல்லவில்லை