Showing posts with label ஞானி. Show all posts
Showing posts with label ஞானி. Show all posts

Saturday, 25 May 2013

ஊக்கமுடையோர் இடையூறுகளுக்கு அஞ்சிட மாட்டார்கள்.

  நல்ல கருத்தை ,கவிதையை விரும்பி படிக்க நமக்குள் ஒரு பொறி தட்டுகிறது. அது நம்மை உருவாக்குகின்றது .நம்மையும் அதைவிட சிறப்பாக எழுதத் தூண்டுகின்றது. நமக்குள் ஒளிந்துக் கிடப்பதனை நாம் அறியோம் .நம்மை நாமே நாம் அறிந்து விட்டால் நாம் ஞானி

  மற்றவர் நல்ல கருத்துகளை சுயமாக சிந்தித்து சிறப்பாக நயம்பட தருகின்றார்களே நாம் மட்டும் அடுத்தவர் கருத்தை போடுகின்றோமே என்ற வருத்தம் வேண்டாம்.  சொல்லியவர் ,எழுதியவர் ,உரிமையாளர் பெயரையும் சேர்த்து விடுங்கள் .அது இருவருக்கும் அறிவைப் பகிர்ந்த நன்மையை கொடுத்து விடும். காப்புரிமை இப்பொழுது வந்ததுதான்.சங்க இலக்கியங்களுக்கு காப்புரிமை இருந்திருந்தால் தமிழ் மறைந்திருக்கும்.

Saturday, 13 April 2013

'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் '

மன்னரின் ஆட்சி மிகச் சிறப்பாக இருந்தும் மன்னரின் மனதில் மகிழ்வில்லை.ஞானம் பெற ஞானியை தேடிச் சென்றார் . தம் மனதில் மகிழ்வில்லை அதற்கு நல்வழி சொல்லுங்கள் என ஞானியிடம் விரும்பிக் கேட்டார்
'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் ' என ஞானி சொல்லிவிட்டு அந்த இடத்தை வீட்டு அகன்றார் .
மன்னர் மனதில் விரக்தி வர இவ்வளவு தூரம் வந்து இவருக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்து வந்து பார்த்தோம் முறையாக அறிவுரைக் கொடுக்காமல் சென்று விட்டாரே என்ற வருத்தத்தோடு தனது அரண்மனைக்கு திரும்பினார். அவர் மனதில் அது உறுத்திக் கொண்டிருக்க தனது மந்திரியை அழைத்தனுப்பி மன்னர் தன் வருத்தத்தை தெரிவித்தார்.