Showing posts with label தீமை. Show all posts
Showing posts with label தீமை. Show all posts

Sunday, 13 October 2013

இந்த கொள்கை உயர்வைத் தரும் _ எது உண்மை ?


இந்த உலகம் நமக்கு
நிலையானதல்ல தற்காலிகமானதே 

இந்த செயல் நமக்கு
நன்மையும்  தீமையும் சேர்ந்த கலவை

இந்த உள்ளம்  நம்மை
நன்மையை நோக்கி உயர்த்துவது  உயர்வு

இந்த  நமக்கு
நன்மையை நாடி உந்துதல் சிறப்பு

இந்த வாழ்க்கை நமக்கு
உயர்வைத் தந்து  தாழ்வை தகர்க்க் வேண்டும்

இந்த காதல் நமக்கு
அனுமதிக்கப் பட்டதாய் மகிழ்வை தர வேண்டும்

இந்த ருசி நமக்கு
மனிதருக்கு மனிதர் மாற்பட்டது 

இந்த கலவி வரும் வழி
கற்றதனால் வரும் அனுபவத்தால் சிறப்படையும்

இந்த பெற்ற செல்வம்
சேர்த்த முறையும் செலவிடும் முறையும் நற்செயலாய் அமைதல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
எது உண்மை ?

 இந்த உலகம்
 நமக்கு
 நிலையானதா தற்காலிகமானதா

 இந்த செயல்
 நமக்கு
 நன்மையா தீமையா

 இந்த உள்ளம்
 நம்மை
 உயர்த்துமா தாழ்த்துமா


இந்த பார்வை
 நமக்கு
 பலமா  பலவீனமா

இந்த வாழ்க்கை
நமக்கு
உயர்வா தாழ்வா

இந்த காதல்
நமக்கு
கூடுமா கூடாதா

இந்த ருசி
நமக்கு
நல்லதா கெட்டதா

Monday, 1 April 2013

நன்மையை ஏவு தீமையைத் தடு

சமூகச் சீர்திருத்தத்தை செய்
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி  செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை   நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி  மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில்  நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி

தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல்
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்