Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, 8 September 2014

நம்பிக்கையற்ற நிலை

 
எதிலும் சந்தேகமும் பயமும்
------------------------------
நம்பிக்கையற்ற நிலை
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )
-------------------
சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்
----------
தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா
--------------------
உடல் நிலை குறித்து

பையன் பத்திரமாக திரும்பி வருவானா
ஓரமாக நிற்கும் குழந்தை கிழே விழுந்து விடுமோ
உடல்நிலை பாதிக்கப் பட்டதால் இறந்து விடுவாரோ
வேகமாக செல்லும் ஊர்தியால் விபத்து நிகழ்ந்து ஆபத்தாகுமோ
பிரசவம் நல்ல விதமாக நடக்குமோ
----------------------
திட்டங்கள் குறித்து

பாஸ்போர்ட் ( நம் நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல நம் நாடு கொடுக்கும் அனுமதி)கிடைக்குமா
பாஸ்போர்ட் கிடைத்தாலும் விசா (அடுத்த நாடு உள் நுழைய அந்த நாடு கொடுக்கும் அனுமதி) கிடைக்குமா
விசாவுக்கு கொடுத்த பணம் விரயமாகுமோ
விசா கிடைத்தாலும் அந்நாட்டில்
வேலை கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ
----------------------
கோளாறின் காரணங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்வுகள்
எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்திருக்கலாம்
பரம்பரையால் வரும் குணமாகலாம்
பிரசவ நிகழ்வின் நிலையால் வரவும் வாய்ப்புண்டு

மனக்கட்டுப்பாடற்ற நிலை
தன்னிலை குறித்து தனக்கே அதிருப்தி
தேவையற்ற எண்ணங்கள்
துன்புறு நிலை
கவலையை அதிகமாக்கிக் கொள்வது
ஒன்றைப் பற்றியே சிந்தித்து அது நிகழாமல் போவது
---------------------
தீர்வு

இறை நம்பிக்கை
நடப்பதுதான் நடக்கும் என்ற நம்பிக்கை
சிந்தனையை மாற்றும் நிலை
தேவையான உடல் வேலை,மற்றும் உடற் பயிற்சி
தேவையான,. மகிழ்வான பொழுது போக்கு
மக்களோடு கலந்து பழகுதல்
இழப்பை பற்றி கவலைப் படாமல் இருத்தல்

( இந்த கட்டுரை சிறு விளக்கம் . மருத்துவரீதியான ஆய்வுக்கு உட்பட்டதல்ல,மனோதத்துவக் கட்டுரையும் அல்ல. )
(hallucination = an experience involving the apparent perception of something not present. Imaginary illness)
- முகம்மது அலி 

Sunday, 19 May 2013

நோக்கம் உயர்வானதாக இருக்க வேண்டும்


 சிலர் கற்பனையாக ஒரு கருவை வைத்து நிறைவான நல்ல கட்டுரையும், உயர்ந்த கவிதையும் தருவார்கள். இதுவும் தொடரும் காலத்தில் ஒளி வீசுகின்றது
சேவை செய்தவர்களின் உண்மை நிகழ்வுகள் சிறிதும் கலப்படமற்று சிறப்பானதாக தரப்பட்டது சரித்திரமாகி விடுகிறது.
நமக்காக எழுதி வைத்த தினக் குறிப்புகளும் , நிகழ்வுகளும் நமது குடும்பத்திற்கு நன்மையை தரக் கூடியதாக அமையலாம் . அந்த குறிப்பில் நமது உறவு முறைகள் காணப்பட்டிருந்தால் வருங்கால பரம்பரைகள் நமது உறவுகளை அறிய வைக்கின்றது .உறவை நாடுபவர்களுக்கு இது பயன்படும்.

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(புகாரி ஹதீஸ்-1)