Showing posts with label நோக்கம். Show all posts
Showing posts with label நோக்கம். Show all posts

Sunday, 11 May 2014

வழி விடு அவள் அவளாக வாழ வேண்டும்

அவளை விட்டு விடு
அவளை அவள் நோக்கத்திற்கு விட்டு விடு

அவள் பார்வையில் கடிவாளம் போட்டது போதும்
அவள் போகும் வழியில் வேலி போட்டது போதும்
அவளை அவள் நோக்கத்திற்கு விட்டு விடு

அவளை எத்தனை காலங்கள்தான்
அவளை உன் பார்வையோடு ஒன்றிப்போக
அவளை உன் சிறையில் அடைத்து வைப்பாய்

உன் வாழ்வை உயர்த்திக் கொள்ள
அவள் வாழ்வை உன் சிறையில் அடைத்து வைக்கிறாய்
உன் வாழ்வுக்கு எல்லை வகுத்துக் கொள்ள வில்லை
அவள் வாழ்வுக்கு எல்லை வகுக்கிறாய்

Saturday, 15 March 2014

நோக்கத்தை வைத்தே அறுவடையின் பலனும்

நோக்கத்தை வைத்தே செயலின் தேடல்
நோக்கத்தை வைத்தே செயலின் முடிவும்

நாட்டை விட்டு போனான் நாலுகாசு சேர்க்க
நாட்டை விட்டு போனவனுக்கு வீட்டு நினைவு வர

தொடுத்த நோக்கம் தொலைந்து விட
யெடுத்த செயலில் தொய்வு விழுந்தது

கல்வி கற்க சென்றவன் கசடை அள்ளி வந்தான்
பொருள் சேர்க்க சென்றவன் பொருளை விட்டு வந்தான்

மரம் வெட்ட போனவன் மனிதனை வெட்டி வந்தான்
நோக்கம் அற்று போனவன் நேயத்தை அழித்து வந்தான்

Sunday, 28 July 2013

செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.

துயரம் குடலில் அமிலத்தை அதிகமாக்குகிறது
அதிகமான அமிலம் குடலை பாதிக்கிறது
குடலின் பாதிப்பு உடலைப் பாதிக்கிறது
துயரத்தின் அளவைப் பொறுத்து உடலோடு மனதின் பாதிப்பும் அதிகமாகிறது

உப்பு அளவோடு சேர உணவு சுவைக்கிறது
உப்பு அதிகமாக உணவு கைக்கிறது
உப்புக்கு ஒரு சுவை தரவும் உதவுகிறது
உப்பு அதிகமாக சுவையும் கெடுகிறது
உப்பின் தண்மை மாறுவதில்லை
துயரத்தின் தண்மையும் மாறுவதில்லை
துயரத்தை மையப்படுத்தும் தன்மை துவளச் செய்கிறது
செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.

Sunday, 19 May 2013

நோக்கம் உயர்வானதாக இருக்க வேண்டும்


 சிலர் கற்பனையாக ஒரு கருவை வைத்து நிறைவான நல்ல கட்டுரையும், உயர்ந்த கவிதையும் தருவார்கள். இதுவும் தொடரும் காலத்தில் ஒளி வீசுகின்றது
சேவை செய்தவர்களின் உண்மை நிகழ்வுகள் சிறிதும் கலப்படமற்று சிறப்பானதாக தரப்பட்டது சரித்திரமாகி விடுகிறது.
நமக்காக எழுதி வைத்த தினக் குறிப்புகளும் , நிகழ்வுகளும் நமது குடும்பத்திற்கு நன்மையை தரக் கூடியதாக அமையலாம் . அந்த குறிப்பில் நமது உறவு முறைகள் காணப்பட்டிருந்தால் வருங்கால பரம்பரைகள் நமது உறவுகளை அறிய வைக்கின்றது .உறவை நாடுபவர்களுக்கு இது பயன்படும்.

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(புகாரி ஹதீஸ்-1)