Showing posts with label பிரார்த்தனை. Show all posts
Showing posts with label பிரார்த்தனை. Show all posts

Friday, 20 September 2013

மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்

மனதில் விரிசல்
உள்ளத்தில் நடுக்கம்
நினைப்பில் தடுமாற்றம்
புரிதலற்ற போக்கு
அறிதளற்ற நிலை
சிக்கலில் சிக்கும் குழப்பம்
வடிகால் அற்ற தேக்கம்
தவறான பாதையில் தவறிப் போதல்
அனாதையாய் விடுபட்ட நிலை  
வார்த்தைகள் மற்றும் நம்பிக்கை துரோகம்,
நொறுங்கிய  மனமாய்   மாய்த்துக் கொள்ளும் நிலை
பாராமுகமாய் படைத்தவனை அறியாமல் இருந்த நிலை

கடலில் சிப்பிக்குள் இருக்கும்  முத்து மறைந்திருக்க
உலகில் உயர்ந்திருக்கும் இருக்கும் இறையோனும் மறைந்திருக்க
கடலில் மூழ்கி முத்தெடுத்து சேர்ப்பதுபோல்
இறைமறை கற்று அதில் மூழ்கி உயர்வை பெற வழி கண்டேன்
இறையை நாடும் மனம் இயல்பானது

வாழும் வாழ்க்கை உயர்வானது
செய்யும் செயல் சிறப்பானது

Friday, 10 May 2013

அனைத்தும் நன்மையாய் அமைந்தது!

நான் கேட்டதை அவன் கொடுக்கவில்லை
நான் கேட்காததை அவன்  கொடுத்தான்
அவன் கொடுக்காததும் நன்மையாய் போனது
அவன் கொடுத்ததும் நன்மையாய் போனது

நான் வலிமை கேட்டேன் .........
இறைவன்  எனக்கு சிரமங்களை கொடுத்து   என்னை வலுவாக்கி   அதனை சமாளிக்க வழி செய்தான்.
நான் அறிவு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத்  தீர்க்க முறை செய்தான்.
இறைவனிடம்  வளமாக  வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..
ஆண்டவனிடம்  தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

Monday, 25 March 2013

எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன்

நான் வலிமை கேட்டேன் .........
இறைவன்  எனக்கு சிரமங்களை கொடுத்து   என்னை வலுவாக்கி   அதனை சமாளிக்க வழி செய்தான்.
நான் அறிவு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத்  தீர்க்க முறை செய்தான்.
இறைவனிடம்  வளமாக  வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..
ஆண்டவனிடம்  தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.
நான் மக்களின் அன்பு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை  கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்  
இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற  அவனது அருள் கேட்டேன் ...
ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.    
நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை
ஆனால்  எனக்கு  தேவையானது எல்லாம் பெற்றேன்
என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ்