Showing posts with label புதுமை. Show all posts
Showing posts with label புதுமை. Show all posts

Tuesday, 16 December 2014

பழமையை பாதுகாத்து புதுமையை நாடுவது உயர்வு !

உங்களால் அழகிய அரண்மனையை கட்ட முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தர முடியும்
உங்களால் அழகிய அரண்மனையை இடித்துத் தள்ளவும் முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தகர்த்துத் தள்ளவும் முடியும்

உங்களால் இங்கும் அங்கும் கட்டடங்கள் கட்ட முடிந்தாலும்
உங்களால் இங்கும் அங்கும் ஆட்சியை அமைக்க முடிந்தாலும்

உங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும்
உங்களால் உருவாக்கப் பட்ட ஆட்சிகளிலும்
உங்களால் பழமையின் தனித்தன்மையை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது

உங்களால் கட்டவும், இடிக்கவும் முடியும்!
உங்களால் சிதைக்க நினைக்கும்
உங்களால் சரித்திர புகழ்பெற்ற சிறப்பான கட்டிடங்களை
உங்களால் பழைமையின் தனித்தன்மையை கொண்டு வர முடியாது.

Thursday, 20 November 2014

நல்லதை நாடு

தினமும்
கவனித்து
சிந்தித்து
திருத்தி
திருந்து
நல்லதை நாடு
நாடியதை சரி செய்
சரி செய்ததை செம்மை செய்

கணினியும்
சீராக இயங்க
சுத்தம் செய்தலும்
புதிப்பித்தலும்
மேம்படுத்தலும்
புதுப்பித்தலும்
அவசியம்

கன்னியும்
முகநூலில்
நுழைந்தாலும்
கன்னியாகவே
வெளியேற
கவனம் செலுத்தி
கண்டதையும் காணாமல்
களங்கம் வராமல்
நல்லதை கற்று
அல்லவை ஒதுக்கி
புதுமை பெற்று
உயர்வு பெற்று
பெருமை பெற்று
சிறப்பு அடைதல்
சிறப்பு

Saturday, 18 May 2013

மனைவி விரும்ப சோகத்தை விழுங்கு மனைவி கொடுத்த உணவை விழுங்குவது போல


சமையலில் கெட்டிக்காரர் யார் ஆணா! பெண்ணா! இம்மாதிரி ஆராய்ச்சி வேண்டாம். பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க  காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.
மனைவி சமைக்கும் உணவு சமயத்தில் நன்றாக இல்லையென்றாலும் அதனை சொல்லக் கூடாது. பெண்கள்  புதுமையான சமைக்க கற்றுக் கொள்ள முயற்சித்தாலும் அதற்கு நாம்தான் ருசி பார்த்து சொல்லவேண்டும். அவர்கள் சமைத்த உணவு அவர்களுக்கு அருமை . ஆனால் எப்படி இருந்தாலும் 'அருமையாக இருக்கிறது' என்றுதான் சொல்ல வேண்டும். 'நன்றாக இல்லை' என்று சொன்னால் அடுத்த சமையல் ஆராய்ச்சி நடக்காது. நாம் வாங்கிக் கொடுத்த சமைக்கும் கலை புத்தகம் ஒதுக்கப்பட்டுவிடும் மற்றும் அது சம்பந்தமாக எந்த தொலைகாட்சி நிகழ்ச்சியையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வந்த சமையல் கலை அவர்கள் அம்மா வீட்டில் கற்று வந்தது.நாம் உண்டு பழகியது. நம் அம்மா கொடுத்த பாச உணவு. அதனால் அது எப்படி இருந்தாலும் நமக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
அவர்களுக்கு சமையல் கலை பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். முருங்கக்காய் போட்டு சாம்பார் செய்வார்கள் கறி குழம்புக்கு  முறுங்கக்காய் போடச் சொன்னால் இது என்ன புதுமை நன்றாக இருக்காது என்று சொல்லி விடுவார்கள். ஆண்களுக்கு எல்லாவற்றிலும் புதுமை தேவை. அதில் உணவும் விதிவிலக்கல்ல.