Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts

Thursday, 20 November 2014

நல்லதை நாடு

தினமும்
கவனித்து
சிந்தித்து
திருத்தி
திருந்து
நல்லதை நாடு
நாடியதை சரி செய்
சரி செய்ததை செம்மை செய்

கணினியும்
சீராக இயங்க
சுத்தம் செய்தலும்
புதிப்பித்தலும்
மேம்படுத்தலும்
புதுப்பித்தலும்
அவசியம்

கன்னியும்
முகநூலில்
நுழைந்தாலும்
கன்னியாகவே
வெளியேற
கவனம் செலுத்தி
கண்டதையும் காணாமல்
களங்கம் வராமல்
நல்லதை கற்று
அல்லவை ஒதுக்கி
புதுமை பெற்று
உயர்வு பெற்று
பெருமை பெற்று
சிறப்பு அடைதல்
சிறப்பு

Thursday, 9 January 2014

சிறப்பு அறிதல் சிறப்பு


மானிடராய் பிறத்தல் சிறப்பு
பிறப்புக்கு காரணமானவனை தொழுதல் சிறப்பு
பெற்றோரை பேணி பாதுகாத்தல் சிறப்பு
சேவை செய்தல் பிறப்பின் சிறப்பு

சிறப்பை நேசித்தல் சிறப்பு
சிறப்போடு வாழ்தல் சிறப்பு
சிந்தித்து செயல்படுதல் சிறப்பு
செயல்படும் ஆற்றலை செயல்படுத்துதல் சிறப்பு

Sunday, 7 April 2013

சுமப்பதில் உயர்வான சுகம்

சுமப்பதில் உயர்வான சுகம்
சுமையாக நினைக்காத சுமை
சுமை வளர்வதில் வரவேற்ப்பு
சுமையை  சுமையாக நினைக்காத சிறப்பு
சுமைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம்
சுமையைச் சுமக்க தன் நலத்திலும் கவனம்
சுமை சுமப்பதில் காலக் கணக்கு
சுமந்த சுமை தானே குறித்த காலத்தில் சுமையைக் குறைத்துவிடும் சிறப்பு

வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது.   மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள்.   இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும்  நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.