Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Wednesday, 5 March 2014

இஸ்லாம் நல்லது முஸ்லிம்களில் சிலர் கெட்டவர்கள்.

மதம் என்ற போர்வை அதைப்பற்றி கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு குளிர் காக்க உதவுகிறது /

எனக்கு வகாபிசமும் தெரியாது பைஜிசமும் தெரியாது

நான் ஒரு முஸ்லிம் ,

இஸ்லாம் நல்லது முஸ்லிம்களில் சிலர் கெட்டவர்கள்.அது இயல்பு .அவரும் நல்வழி பெற வேண்டும்

குர்ஆன் விளக்கத்துடன் படிப்பேன் , நபிமொழியும் அறிவேன் .அவைகளை அறிவது இப்பொழுது மிகவும் சுலபம் ,கணினி மிகவும் உதவுகிறது
இறைவன் அருளால் வாழ்வதற்கு நமது முயற்சியும் ,இக்லாஸ்( உளத்தூய்மை). ,இறைவனது அருளும் வேண்டும்

Monday, 23 September 2013

உண்மை அறிய நாடுங்கள். மக்களை பிரிவு படுத்தாதீர்கள்



அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின் பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில் உன் தந்தை பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ! பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன் வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர் படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..

Tuesday, 30 July 2013

தீவிரவாத செயலை திரித்து பேசும் நிலை


காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில் வந்தவர்தான். அங்கு நடக்கும் ஒரு தீவிரவாத செயலிலும் ஈடுபடும் ஒரு தீவிரவாதியும் முஸ்லிமாக இருக்கலாம் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும் பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை ஊக்குவித்து அதில் ஆதாயம் தேடுபவராக உள்ளனர் . ஊடகங்களும் அதற்க்கு தூபம் போடுகின்றனர்
 இஸ்லாம் தீவிரவாத்தினை ஆதரிக்கவில்லை .
ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான். 
உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்