Showing posts with label ரோஜா மலர். Show all posts
Showing posts with label ரோஜா மலர். Show all posts

Tuesday, 15 October 2013

சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியில் பூத்த ரோஜா மலர்


பெற்றவளை அறியேன்
பெற்ற கரு உருவாக்கியவனை அறியேன்

பெறுவதற்கு காரணமான காம காமுகனை அறியேன்
பெற்றவள் காரணமில்லாமல் சாக்கடையில் எறிந்தவளை அறியேன்

நான் அறிவேன் காரணத்திற்காகத்தான் நான் வாழ்வதனை
நான் அறிவேன் காரணத்திற்காக என்னை இறைவன் உயிர்பித்தானென்று

உற்றார் உறவினர் இல்லை உதவி செய்ய
மற்றோர் உறவற்றவர் கூசாமல் குறை சொல்லி செல்கின்றார் 

நான் செய்த உதவிகளை மறந்து நிற்கின்றார்
நான் போடும் பிச்சைகளை பகிர்ந்து உண்கின்றார்

சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியின் பூக்களை  தலையில் வைத்து மகிழ்கின்றார்
சாக்கடையில் வீசப்பட்டு வெளியில் வந்து வளர்ந்தான் புகழ் வளர மறுக்கின்றார்

காரியம் மென்றால் கை கட்டி நிற்கின்றார்
காரியம் முடிந்தபின் கை கொட்டி சிரிக்கின்றார்

இறைவனது படைப்பை ஏளனம் செய்கின்றார்
இறைவனால் இவர் ஏளனப் படுத்தப் படுவார் என்பதனை மறக்கின்றார்

இறைவா நான் அவர்களை யேசவில்லை
இறைவா நான் அவர்களை மன்னிக்கவே செய்கின்றேன்