பெற்றவளை அறியேன்
பெற்ற கரு உருவாக்கியவனை அறியேன்
பெறுவதற்கு காரணமான காம காமுகனை அறியேன்
பெற்றவள் காரணமில்லாமல் சாக்கடையில் எறிந்தவளை அறியேன்
நான் அறிவேன் காரணத்திற்காகத்தான் நான் வாழ்வதனை
நான் அறிவேன் காரணத்திற்காக என்னை இறைவன் உயிர்பித்தானென்று
உற்றார் உறவினர் இல்லை உதவி செய்ய
மற்றோர் உறவற்றவர் கூசாமல் குறை சொல்லி செல்கின்றார்
நான் செய்த உதவிகளை மறந்து நிற்கின்றார்
நான் போடும் பிச்சைகளை பகிர்ந்து உண்கின்றார்
சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியின் பூக்களை தலையில் வைத்து மகிழ்கின்றார்
சாக்கடையில் வீசப்பட்டு வெளியில் வந்து வளர்ந்தான் புகழ் வளர மறுக்கின்றார்
காரியம் மென்றால் கை கட்டி நிற்கின்றார்
காரியம் முடிந்தபின் கை கொட்டி சிரிக்கின்றார்
இறைவனது படைப்பை ஏளனம் செய்கின்றார்
இறைவனால் இவர் ஏளனப் படுத்தப் படுவார் என்பதனை மறக்கின்றார்
இறைவா நான் அவர்களை யேசவில்லை
இறைவா நான் அவர்களை மன்னிக்கவே செய்கின்றேன்
